பதிவு செய்த நாள்
06 ஆக2018
00:06
அண்மையில் கோல்கட்டாவில் பலர், ஏ.டி.எம்., கார்டு வாயிலான நுாதன மோசடியால் பல லட்சங்களை இழந்துள்ளனர்.
‘ஸ்கிம்மிங்’ எனப்படும் உத்தியை பயன்படுத்தும் மோசடி ஆசாமிகள், இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வகை மோசடியில் இருந்து தற்காத்து கொள்ள, முன்னெச்சரிக்கையாக, ஏ.டி.எம்., பயன்பாட்டில் தற்காப்பு வழிகளை கடைபிடிக்க வேண்டும்.
ஸ்கிம்மர் எனப்படும் சிறிய சாதனங்கள் வாயிலாக, ஏ.டி.எம்., கார்டு தகவல்களை திருடி, அதை தவறாக பயன்பத்துவது,ஸ்கிம்மிங் எனப்படுகிறது. இந்த முறையில் மோசடி செய்ய, ரகசிய கேமரா மூலம், ‘பின்’ எண்ணையும் தெரிந்து கொள்கின்றனர்.
எனவே, ஏ.டி.எம்., இயந்திரத்தை பயன்படுத்தும் போது அதன் கார்டு ரீடர் பகுதியை கவனிக்க வேண்டும். அந்த பகுதி வழக்கத்தை விட நீளமாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஸ்கிம்மர் சாதனம் எதுவும் இல்லை என்பதை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.கார்டை பயன்படுத்தும் போது, எண்களை மற்றவர்கள் பார்க்க முடியாத வகையில் கைகளால் மறைத்துக்கொண்டு, டைப் செய்ய வேண்டும். இதன் மூலம் ரகசிய கேமரா இருந்தால் கூட, பின் எண்ணை பார்க்க முடியாமல் செய்யலாம்.
ஏ.டி.எம்., இயக்கத்திற்கான குறுஞ்செய்தி சேவை தகவல் வசதியை தவறாமல் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கார்டு பரிவர்த்தனையை கண்காணிக்கலாம். வேறு யாரேனும் கைவரிசை காட்டியிருந்தால் உடன் கண்டறிந்து, வங்கிக்கு தகவல் தெரிவித்து கார்டை முடக்க நடவடிக்கை எடுக்கலாம்.
எதிர்பாராத விதமாக ஏதேனும் மோசடி நடந்து இருப்பதாக சந்தேகம் எழுந்தால், உடனே வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|