கமாடிட்டி சந்தைகமாடிட்டி சந்தை ... தொழில் அமைப்பினர்அரசுக்கு கோரிக்கை தொழில் அமைப்பினர்அரசுக்கு கோரிக்கை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரெப்போ உயர்­வும் வளர்ச்சி கணிப்­பும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2018
00:18

இந்­திய, ரிசர்வ் வங்கி, ரெப்போ விகி­தத்தை மீண்­டும் கால் சத­வீ­தம் உயர்த்­தி­யுள்­ளது, பல செய்­தி­க­ளைச் சொல்­கிறது. இந்த நிதி­யாண்­டுக்­குள், இன்­னும் ஒரு முறை­யா­வது ரெப்போ விகி­தம் உய­ர­லாம் என்­பது எதிர்­பார்ப்பு.

மத்­திய, ரிசர்வ் வங்கி, இதர வங்­கி­க­ளுக்கு வழங்­கும் கட­னுக்கு வசூ­லிக்­கும் வட்­டியே ரெப்போ விகி­தம். இந்த நிதி­யாண்­டில், இரண்­டா­வது முறை­யாக ரிசர்வ் வங்கி, கால் சத­வீ­தம் ரெப்போ வட்­டியை உயர்த்த, அது தற்­போது, 6.50 சத­வீ­த­மாக உள்­ளது.

கடந்த, 2013க்குப் பின், இப்­போது தான் தொடர்ச்­சி­யாக இரண்டு முறை வட்டி விகி­தம் உயர்த்­தப்­பட்டு உள்­ளது. இதைப் பொரு­ளா­தார நிபு­ணர்­களும், பங்­குச் சந்தை முத­லீட்­டா­ளர்­களும் எதிர்­பார்த்து தான் இருந்­த­னர். அத­னால், சந்­தை­யில் பெரிய அதிர்ச்சி ஏதும் ஏற்­ப­ட­வில்லை.ஆனால், இதை வேறு மாதி­ரி­யாக புரிந்­து­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

வட்டி விகித உயர்­வுக்கு, ஆறு கார­ணங்­கள் முக்­கி­ய­மா­னவை. அவை:

பண­வீக்­கம் தொடர்ச்­சி­யாக உயர்ந்து வரு­வது; அப்­படி உயர்ந்து, அது பொரு­ளா­தா­ரத்­தின் மீது பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முன், முன்­னெச்­ச­ரிக்­கை­யாக தடுத்­து­வி­டத் துடிக்­கும் ரிசர்வ் வங்கி; சம்பா பருவ பயிர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்ள குறைந்­த­பட்ச ஆதார விலை­யில் உயர்வு.

பணவீக்கம்

பல மாநி­லங்­களில் விவ­சா­யக் கடன்­க­ளைத் தள்­ளு­படி செய்ய காட்­டப்­படும் முனைப்பு; கச்சா எண்­ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழல்; டால­ருக்கு நிக­ரான ரூபா­யின் மதிப்பு சரிந்து வரு­வது.பண­வீக்­கம் முக்­கி­ய­மா­னது. அதை, 4 சத­வீ­தத்­துக்­குள் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்­பது ரிசர்வ் வங்­கி­யின் எண்­ணம். ஆனால், அது மேலே குறிப்­பிட்ட பல கார­ணங்­க­ளால், தொடர்ந்து கட்­டுப்­பா­டற்று இருக்­கிறது.

உர்­ஜித் படேல் கூற்­றின்­ப­டியே, இந்த நிதி­யாண்­டின் இரண்­டாம் அரை­யாண்­டில், பண­வீக்­கம், 4.8 சத­வீ­தத்தை தொடும். அடுத்த நிதி­யாண்­டின் முதல் அரை­யாண்­டில் அது, 5 சத­வீ­தத்­தை­யும் தொடும்.பண­வீக்­கம் கட்­டுக்­குள் இல்­லை­யென்­றால், எவ்­வ­ளவு வரவு வந்­தா­லும் அது போதாது. பல்­வேறு பொருட்­கள், சேவை­க­ளின் மீது, பண­வீக்­கம் கடு­மை­யான பாதிப்பை ஏற்­ப­டுத்­தும். இதை எப்­ப­டி­யா­வது கட்­டுப்­ப­டுத்­தியே தீர வேண்­டும் என்று கங்­க­ணம் கட்­டி­யி­ருக்­கி­றார், உர்­ஜித் படேல்.

அதற்­குத்­தான் இந்த ரெப்போ விகித உயர்வு. இதன் மூலம், மக்­க­ளி­டையே பணப்­பு­ழக்­கம் குறை­யும். அத­னால், பணத்­தின் மதிப்பு உய­ரும்; விலை­வாசி கட்­டுக்­குள் இருக்­கும்.குறிப்­பாக, சம்பா பருவ பயிர்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்ள குறைந்­த­பட்ச ஆதார விலை, நாட்­டில் பண­வீக்­கத்தை அதி­கப்­ப­டுத்­தும் என்ற அச்­சம் நில­வு­கிறது.

விவ­சா­யி­க­ளி­டம் பணப்­பு­ழக்­கம் அதி­க­ரித்­தால், அது ஒரு பக்­கம் சுபிட்­சம் தான். மறு­பக்­கம், பல பொருட்­க­ளின் விலை­கள் உய­ரும். அப்­படி ஒரு சூழல் ஏற்­ப­டா­மல் இருக்­கவே, முன்­கூட்­டியே ரெப்போ வட்­டியை உயர்த்தி காபந்து செய்­தி­ருக்­கி­றார், உர்­ஜித் படேல்.

இன்­னொரு முக்­கிய கார­ணம், அமெ­ரிக்­கா­வுக்­கும், சீனா­வுக்­கும் இடையே உயர்ந்து வரும் வர்த்­த­கப் போர் அபா­யம். அது, எப்­ப­டிப்­பட்ட பாதிப்பை இந்­தியா மீது ஏற்­ப­டுத்­தும் என்­ப­தில் தெளி­வில்லை. ஆனால், ஒரு­வித இணக்­க­மற்ற சூழல் ஏற்­பட்டு, ஏற்­று­ம­தி­கள் மேலும் சரி­யுமோ என்ற அச்­சம் நில­வு­கிறது. இதை மன­தில் கொண்­டும், ரெப்போ வட்டி உயர்வு செய்­யப்பட்­டுள்­ளது.

விமர்­ச­னங்­கள்

ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ போன்ற பல நிதிக் கரு­வி­களை வைத்­துக் கொண்­டி­ருக்­கும் மத்­திய ரிசர்வ் வங்­கிக்கு, இது சர்க்­கஸ் போன்­றது. நிதி நிலை­மை­யைச் சீராக வைத்­துக்­கொள்ள வேண்­டும்; வளர்ச்­சி­யும் பாதித்­து­வி­டக் கூடாது. அதற்­குத் தேவை­யான முத­லீ­டு­கள் கிடைக்க வேண்­டும். இதை­யெல்­லாம் யோசித்தே, ரிசர்வ் வங்கி, இத்­த­கைய கூட்­டல், குறைத்­தல்­களை செய்து சமா­ளிக்­கிறது.

இப்­போதே எதற்கு இவ்­வ­ளவு வட்டி உயர்த்­தப்­பட வேண்­டும்? இன்­னும் குறைந்­த­பட்ச ஆதார விலை, விவ­சா­யி­க­ளைப் போய் சேரவே இல்லை. பண­வீக்­கம் பற்றி ரொம்­ப­வும் கவ­லைப்­பட வேண்­டுமா? வளர்ச்சி தானே முக்­கி­யம்? பண­வீக்­கம் இல்­லா­மல் வளர்ச்சி சாத்­தி­யம் இல்லை. 5 சத­வீ­தம் வரை பண­வீக்­கம் போனா­லும் கவ­லைப்­பட வேண்­டாம்.

அதை பிற்­கா­லத்­தில் கட்­டுக்­குள் கொண்டு வந்­து­வி­ட­லாம். எதற்கு இப்­படி தொடை நடுங்க வேண்­டும் என்­றெல்­லாம் கடு­மை­யான விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

ரெப்போ விகித உயர்வை பரிந்­து­ரைத்த, நிதிக் கொள்கை குழு­வுக்கு இதெல்­லாம் தெரி­யா­மலா இருக்­கும்? நிச்­ச­யம் தெரிந்தே இருக்­கும். அப்­ப­டி­யும் முன்­கூட்­டியே தயா­ரிப்­போடு இருக்க வேண்­டும் என்று நினைப்­ப­தில் தவ­றில்லை. இப்­ப­டியே விட்­டு­விட்­டால், தேவை­யற்ற பொரு­ளா­தா­ரக் குமிழ் உரு­வா­கி­வி­டும்.

ஏற்­க­னவே ரியல் எஸ்­டேட் துறை­யில் அது­தான் நடந்­துள்­ளது. விலை­கள் கற்­ப­னைக்கு எட்­டாத உய­ரத்­துக்­குப் போய்­விட்­டன. மக்­க­ளு­டைய வாங்­கும் சக்­திக்கு மேல் பல மடங்கு உயர்வு. விளைவு, அந்­தத் துறை­யில் பெரும் தேக்­கம். இதற்­கான அடிப்­ப­டைக் கார­ணங்­களில் ஒன்று, பண­வீக்­கம்.

என்ன செய்­ய­லாம்?

நம்­மைப் போன்ற மத்­தி­ய­மர்­கள் இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­களை எப்­படி சமா­ளிக்­க­லாம்?புதிய வீட்­டுக் கட­னு­டைய வட்டி விகி­தம் உயர்ந்­து­வி­டும். அத­னால், சமா­ளிக்க முடிந்­தால் மட்­டுமே புதிய வீடு வாங்­குங்­கள்.ஏற்­க­னவே கடன் கட்­டிக் கொண்­டி­ருப்­ப­வர்­கள், தங்­கள் மொத்த கடன் காலத்­தின் முதல் பாதி­யில் இருந்­தால், அவ்­வப்­போது பணம் திரட்டி, பிரின்­சி­பல் தொகையை பகு­தி­ய­ள­வே­னும் செலுத்­தி­வி­டுங்­கள்.

நம்­பிக்கை

இனி­மேல் வட்­டி­கள் தொடர்ச்­சி­யாக உய­ரக்­கூ­டிய சமிக்ஞை தான் தெரி­கிறது. முதல் பாதி­யில் இருந்­தால், இ.எம்.ஐ.,யில், வட்­டிக்­கான பகுதி தான் கூடு­த­லாக இருக்­கும். அத­னால் இப்­போதே உஷா­ரா­கிக் கொள்­ளுங்­கள்.சேமிப்­பு­க­ளுக்­கான வட்டி விகி­த­மும் உய­ரும். கூடு­தல் வரு­வாய் எதிர்­பார்த்து பரஸ்­பர சகாய நிதிக்கோ, பங்­குச் சந்­தைக்கோ போன­வர்­கள், கொஞ்ச நாளைக்கு மீண்­டும் வங்­கிச் சேமிப்­பு­க­ளுக்கு வந்­து­வி­ட­லாம்.

இதே­போல், சிறு­சே­மிப்­பு­க­ளுக்­கான வட்­டி­களும் உயர வாய்ப்­புண்டு. ரொம்ப ரிஸ்க் எடுக்க விரும்­பா­த­வர்­கள், பி.பி.எப்., – என்.எஸ்.சி., பத்­தி­ரங்­கள், செல்­வ­ம­கள் சேமிப்பு திட்­டம், அஞ்­ச­லக சேமிப்­பு­கள் என்று கொஞ்­சம் பாது­காப்­பாக ஒதுங்­கிக் கொள்­ள­லாம்.உர்­ஜித் படேல் தெரி­வித்த ஒரு விஷ­யம் முக்­கி­ய­மா­னது. மொத்த உள்­நாட்டு உற்­பத்தி இந்த ஆண்டு, 7.4 சத­வீ­த­மாக இருக்­கும் என்ற கணிப்பை அவர் மாற்­ற­வில்லை. ஆக, வளர்ச்­சிக்கு பாதிப்­பில்லை. நம்­பிக்கை தரும் விஷ­யம் இது ஒன்று தான்.

ஆர்.வெங்­க­டேஷ் பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)