பதிவு செய்த நாள்
07 ஆக2018
00:03
புதுடில்லி:பழைய வர்த்தக வாகனங்களை ஒழிப்பது தொடர்பாக, மீண்டும் பல தரப்பினர் கருத்தை கேட்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர், நிதின் கட்கரி கூறியதாவது:சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க, 2016, மே மாதம், வாகன போக்குவரத்தை நவீனமயமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. வரும், 2020 ஏப்., 1ல் அறிமுகமாக உள்ள இத்திட்டத்தின்படி, 20 ஆண்டுகள் பழமையான, 2.80 லட்சம் வர்த்தக வாகனங்கள் அழிக்கப்படும்.
இது தொடர்பான வரைவு கொள்கையில், மாநில அரசுகள் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என, மத்திய செயலர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.அதை ஏற்று, மாநில அரசுகள், வாகனத் துறை, நுகர்வோர் உட்பட, பலதரப்பினரின் கருத்தை கேட்குமாறு, பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து, திருத்தப்பட்ட வரைவு கொள்கை, பிரதமர் அலுவலக அனுமதிக்கு பின், அமலுக்கு வரும்.இதன் மூலம், ஆண்டுக்கு, 4.50 லட்சம் கோடி ரூபாய் விற்றுமுதல் காணும் வாகன துறை, சர்வதேச வாகன தயாரிப்பு மையமாக மாறும். அழிக்கப்படும் வாகனங்களில் உள்ள உருக்கு, அலுமினியம் போன்ற பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படும். இதனால், வாகனங்கள் விலை, ௨0 – ௩0 சதவீதம் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|