பதிவு செய்த நாள்
07 ஆக2018
00:07
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் இருந்து, தினமும், 70 முதல், 100 டன் உருளைக்கிழங்கு, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், 100க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நாள் ஒன்றுக்கு, 1,500 டன் கிழங்கு விற்பனைக்கு வரும். இங்கிருந்து, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் உருளைக்கிழங்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நீண்ட காலமாக, சீனாவில் இருந்து அதிகப்படியான உருளைக்கிழங்கை இறக்குமதி செய்து வந்த இலங்கை வியாபாரிகள், தற்போது அதை குறைத்து விட்டு, ஊட்டி உருளைக்கிழங்குக்கு, ‘ஆர்டர்’ கொடுத்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு வர்த்தக சபை செயலர், ரங்கசாமி கூறியதாவது:சீனாவில் இருந்து இலங்கைக்கான உருளைக்கிழங்கு ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மீண்டும் ஊட்டி உருளைக்கிழங்குகள், இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தினமும், மேட்டுப்பாளையத்தில் இருந்து துாத்துக்குடி துறைமுகத்துக்கு, 70லிருந்து, 100 டன் உருளைக்கிழங்கு செல்கிறது. அங்கிருந்து கன்டெய்னர் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படுகிறது.தற்போது ஊட்டியில் சீசன் என்பதால் தினமும், 500லிருந்து, 750 டன் உருளைக்கிழங்கு உற்பத்தியாகிறது. 45 கிலோ கொண்ட மூட்டை, 1,100லிருந்து, 1,350 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. வெளிமாநில கிழங்கு, 800லிருந்து, 1,100 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இலங்கை ஏற்றுமதி ஆர்டர் இதே நிலையில் இருந்தால், ஊட்டி கிழங்கு விலை உயரும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு ரங்கசாமி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|