தொழில் அமைப்பினர்அரசுக்கு கோரிக்கைதொழில் அமைப்பினர்அரசுக்கு கோரிக்கை ... பெப்ஸிகோ நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார் இந்திரா நுாயி பெப்ஸிகோ நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார் இந்திரா நுாயி ...
ஊட்டி உருளை இலங்கைக்கு ஏற்றுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2018
00:07

மேட்டுப்பாளையம்:மேட்­டுப்­பா­ளை­யத்­தில் இருந்து, தின­மும், 70 முதல், 100 டன் உரு­ளைக்­கி­ழங்கு, இலங்­கைக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கிறது.கோவை மாவட்­டம், மேட்­டுப்­பா­ளை­யத்­தில், 100க்கும் மேற்­பட்ட உரு­ளைக்­கி­ழங்கு மண்­டி­கள் உள்­ளன. ஆகஸ்ட், செப்­டம்­பர் மாதங்­களில் நாள் ஒன்­றுக்கு, 1,500 டன் கிழங்கு விற்­ப­னைக்கு வரும். இங்­கி­ருந்து, வெளி மாவட்­டங்­கள், வெளி மாநி­லங்­கள், வெளி­நா­டு­க­ளுக்­கும் உரு­ளைக்­கி­ழங்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­கிறது.
நீண்ட கால­மாக, சீனா­வில் இருந்து அதி­கப்­ப­டி­யான உரு­ளைக்­கி­ழங்கை இறக்­கு­மதி செய்து வந்த இலங்கை வியா­பா­ரி­கள், தற்­போது அதை குறைத்து விட்டு, ஊட்டி உரு­ளைக்­கி­ழங்­குக்கு, ‘ஆர்­டர்’ கொடுத்து வரு­கின்­ற­னர். மேட்­டுப்­பா­ளை­யம் உரு­ளைக்­கி­ழங்கு வர்த்­தக சபை செய­லர், ரங்­க­சாமி கூறி­ய­தா­வது:சீனா­வில் இருந்து இலங்­கைக்­கான உரு­ளைக்­கி­ழங்கு ஏற்­று­மதி குறைந்­துள்­ளது. இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி, மீண்­டும் ஊட்டி உரு­ளைக்­கி­ழங்­கு­கள், இலங்­கைக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.
தின­மும், மேட்­டுப்­பா­ளை­யத்­தில் இருந்து துாத்துக்­குடி துறை­மு­கத்­துக்கு, 70லிருந்து, 100 டன் உரு­ளைக்­கி­ழங்கு செல்­கிறது. அங்­கி­ருந்து கன்­டெய்­னர் மூலம் இலங்­கைக்கு அனுப்­பப்­ப­டு­கிறது.தற்­போது ஊட்­டி­யில் சீசன் என்­ப­தால் தின­மும், 500லிருந்து, 750 டன் உரு­ளைக்­கி­ழங்கு உற்­பத்­தி­யா­கிறது. 45 கிலோ கொண்ட மூட்டை, 1,100லிருந்து, 1,350 ரூபாய் வரை விற்­பனை ஆகிறது. வெளி­மா­நில கிழங்கு, 800லிருந்து, 1,100 ரூபாய் வரை விற்­பனை ஆகிறது. இலங்கை ஏற்­று­மதி ஆர்­டர் இதே நிலை­யில் இருந்­தால், ஊட்டி கிழங்கு விலை உய­ரும் வாய்ப்பு உள்­ளது.இவ்­வாறு ரங்­க­சாமி கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)