பதிவு செய்த நாள்
07 ஆக2018
00:08
நியூயார்க்;அமெரிக்காவின் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, இந்திரா நுாயி,62, அக்.,3ல் பதவி விலகுகிறார். எனினும் அவர், நிறுவனத்தின் தலைவராக, 2019 வரை நீடிப்பார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று, நியூயார்க் நகரில், பெப்ஸிகோ நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவராக உள்ள, ரமன் லகார்டா, புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். இவர், ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில், நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து உள்ளார்.
இந்நிலையில், இந்திரா நுாயி வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில் வளர்ந்த எனக்கு, பெப்ஸிகோ போன்ற அசாதாரணமான நிறுவனத்தை வழி நடத்தும்வாய்ப்பு கிடைக்கும் என, சிறிதளவும் நினைத்து பார்க்கவில்லை. அதிக நுண்ணுாட்டச் சத்து பொருட்களின் அறிமுகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றின் மூலம், அனைத்து தரப்பினரின் மேம்பாட்டிலும் பங்கு வகித்துள்ளோம். நிறுவனம், மக்களின் வாழ்க்கையில், அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை, நான் கனவிலும் நினைக்கவில்லை. பெப்ஸிகோ, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி, வலுவான வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|