பதிவு செய்த நாள்
07 ஆக2018
00:11
பெர்லின்:நடப்பாண்டு, ஏப்ரல் – ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில், ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடு, 22 சதவீதம் குறைந்து, 10,080 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இது, கடந்தாண்டின், இதே காலாண்டில், 12,970 கோடி ரூபாயாக இருந்தது என, ‘குஷ்மன் அண்டு வேக்பீல்டு’ மற்றும் ‘கிரடாய்’ நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:ரியல் எஸ்டேட் துறையில், மதிப்பீட்டு காலாண்டில், தனியார் பங்கு முதலீடு குறைந்த போதிலும், கடந்த, 11 ஆண்டுகளில், இரண்டாவது மிகக் பெரிய முதலீடு என்ற சிறப்பை பெற்றுள்ளது.
அலுவலகம்
மதிப்பீட்டு காலத்தில், வீட்டுவசதி துறையில், தனியார் பங்கு முதலீடு, 2,290 கோடியில் இருந்து, 1,510 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.அலுவலகப் பிரிவின் முதலீடு, 3,090 கோடியில் இருந்து, 4,300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அலுவலக தேவை அதிகரித்து வருவதால், இப்பிரிவில் முதலீட்டு ஆர்வம் அதிகரித்துள்ளது.அதுபோல, பலதரப்பட்ட கட்டுமான திட்டங்களில், தனியார் பங்கு முதலீடு, 610 கோடியில் இருந்து, 1,850 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சில்லரை விற்பனை பிரிவில், முதலீடு, 2,840 கோடியில் இருந்து, 1,740 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
தொழில் பிரிவிலும், முதலீடு, 3,760 கோடியில் இருந்து, 680 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
மும்பை
மும்பை நகரம், 2,800 கோடி ரூபாய் பங்கு முதலீடுகளை ஈர்த்து, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.இதில், புரூக்பீல்டு அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், 2,400 கோடி ரூபாய் முதலீட்டில், எஸ்ஸார் குழுமத்தின், ஈக்யுநாக்ஸ் வணிக பூங்காவை கையகப்படுத்தியதும் அடங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|