பெப்ஸிகோ நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார் இந்திரா நுாயிபெப்ஸிகோ நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார் இந்திரா நுாயி ... தமிழகத்துக்கு இரண்டாவது இடம் தமிழகத்துக்கு இரண்டாவது இடம் ...
விரிவாக்க திட்டங்களில் வாகன துறை தீவிரம்:2 ஆண்டுகளில் ரூ.58,000 கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2018
00:13

மும்பை:வாகன துறை, அடுத்த இரண்டு ஆண்­டு­களில், உற்­பத்தி திறனை உயர்த்­த­வும், விரி­வாக்கத் திட்­டங்­களை மேற்­கொள்­ள­வும், 58 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு செய்ய திட்­ட­மிட்­டுள்­ளது.இது குறித்து, தர நிர்­ணயநிறு­வ­ன­மான, ‘கிரி­சில்’வெளி­யிட்­டுள்ள அறிக்கை:இந்­தி­யா­வில், வாக­னங்­க­ளுக்­கான தேவை பெருகி வரு­கிறது. மேலும், அடுத்த சில ஆண்­டு­களில் அம­லுக்கு வர உள்ள வாக­னங்­க­ளுக்­கான, புதிய சுற்­றுச்­சூ­ழல் விதி­மு­றையை பின்­பற்ற வேண்­டிய கட்­டா­யத்­தில் உள்­ளன.
இதை­யொட்டி, உற்­பத்தி திறனை உயர்த்­த­வும், புதிய மாடல்­களை அறி­மு­கப்­ப­டுத்­த­வும், வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளன.இதற்­காக, கடந்த இரு நிதி­யாண்­டு­களை விட, அடுத்த இரு ஆண்­டு­களில், முத­லீ­டு­களை, 30 சத­வீ­தம் அதி­க­ரித்து, 58 ஆயி­ரம் கோடி ரூபா­யாக உயர்த்­தி­யுள்­ளன.நாட்­டில், வாகன துறை­யைச் சேர்ந்த, 18 நிறு­வ­னங்­க­ளின் முத­லீட்டு திட்­டங்­களில் இருந்து, இது தெரி­ய­வந்­துள்­ளது.மாருதி சுசூகி இந்­நி­று­வ­னம், போட்­டியை சமா­ளிக்க, புதிய மாடல் கார்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. இதை­யொட்டி, நடப்பு நிதி­யாண்­டில், விரி­வாக்­கத் திட்­டங்­க­ளுக்­காக, 5,000 கோடி ரூபாய் ஒதுக்­கி­யுள்­ளது.கடந்த ஆண்டு ஒதுக்­கப்­பட்ட தொகை, 3,400 கோடி ரூபா­யாக இருந்­தது.ஹூண்­டாய் மோட்­டார் இந்­தியா நிறு­வ­ன­மும், உற்­பத்தி மற்­றும் விரி­வாக்­கத் திட்­டங்­க­ளுக்­கான முத­லீ­டு­களை அதி­க­ரிக்க உள்­ளது. உள்­நாட்­டில், கார்­க­ளுக்­கான தேவை பெருகி வரு­வ­தால், பரஸ்­ப­ரம் கடும் போட்­டியை சந்­தித்து வரும்.மாருதி, ஹூண்­டாய் நிறு­வ­னங்­கள், ஏற்­று­ம­தியை குறைத்து, உள்­நாட்டு விற்­ப­னையை அதி­க­ரிப்­பது குறித்­தும் பரி­சீ­லித்து வரு­வ­தாக தெரி­கிறது.
மகிந்திரா
இந்­நி­று­வ­னம், வழக்­க­மாக, மூன்று ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை, விரி­வாக்­கத் திட்­டங்­க­ளுக்­காக, 10 ஆயி­ரம் கோடி ரூபாய் ஒதுக்­கும். இந்­நி­லை­யில், 2020 – 21ம் நிதி­யாண்­டுக்­குள், 15 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு செய்ய திட்­ட­மிட்­டுள்­ளது. இதில், உற்­பத்தி திறனை அதி­க­ரிப்­ப­தற்­கும், தொழில்­நுட்ப மேம்­பாட்­டிற்­கும் குறிப்­பி­டத்­தக்க தொகை ஒதுக்­கப்­பட உள்­ளது.
இந்­நி­று­வ­னம், அமெ­ரிக்கசந்­தைக்­காக, ஆடம்­ப­ர­மான, ‘ஆட்­டோ­மொ­லிலி பினின்­ப­ரினா, ரோக்­ஸர்’ கார்க­ளின் தயா­ரிப்­பில் ஈடு­பட்­டுள்­ளது. உள்­நாட்­டில், ‘பி.எஸ்., 4’ சுற்­றுச்­சூ­ழல் விதி­மு­றை­களை பின்­பற்றி, கார்களை தயா­ரிக்­க­வும், புதிய டிராக்­டர்­களை அறி­மு­கப்­ப­டுத்­த­வும் திட்­ட­மிட்­டுள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
கடும் போட்டி
இந்­திய வாகன துறை, அதிக மூல­த­னம் தேவைப்­படும் முக்­கிய துறை­களில் ஒன்­றாக உள்­ளது. குறித்த கால இடை­வெ­ளி­யில், ஆய்வு மற்­றும் மேம்­பாட்­டிற்­கும், உற்­பத்தி திறன் மற்­றும் விரி­வாக்க வளர்ச்சி திட்­டங்­க­ளுக்­கும், மறு முத­லீடு தேவைப்­ப­டு­கிறது. எண்­ணெய் மற்­றும் எரி­வாயு, சில்­லரை விற்­பனை போன்ற துறை­க­ளுக்­கான சரா­சரி முத­லீட்டு காலம், 20 ஆண்­டு­க­ளாக உள்­ளன. ஆனால், வாகன துறை, சுற்­றுச்­சூ­ழல் மாசு­பாடு விதி­முறை, கடு­மை­யான போட்டி போன்ற கார­ணங்­க­ளால், நான்கு ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை, மறு முத­லீடு செய்ய வேண்­டிய நிலை­யில் உள்­ளது.பி.என்.பி., பரிபாஸ் இந்தியா

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)