பதிவு செய்த நாள்
07 ஆக2018
00:13
மும்பை:வாகன துறை, அடுத்த இரண்டு ஆண்டுகளில், உற்பத்தி திறனை உயர்த்தவும், விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ளவும், 58 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.இது குறித்து, தர நிர்ணயநிறுவனமான, ‘கிரிசில்’வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில், வாகனங்களுக்கான தேவை பெருகி வருகிறது. மேலும், அடுத்த சில ஆண்டுகளில் அமலுக்கு வர உள்ள வாகனங்களுக்கான, புதிய சுற்றுச்சூழல் விதிமுறையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இதையொட்டி, உற்பத்தி திறனை உயர்த்தவும், புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.இதற்காக, கடந்த இரு நிதியாண்டுகளை விட, அடுத்த இரு ஆண்டுகளில், முதலீடுகளை, 30 சதவீதம் அதிகரித்து, 58 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளன.நாட்டில், வாகன துறையைச் சேர்ந்த, 18 நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களில் இருந்து, இது தெரியவந்துள்ளது.மாருதி சுசூகி இந்நிறுவனம், போட்டியை சமாளிக்க, புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையொட்டி, நடப்பு நிதியாண்டில், விரிவாக்கத் திட்டங்களுக்காக, 5,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை, 3,400 கோடி ரூபாயாக இருந்தது.ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமும், உற்பத்தி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கான முதலீடுகளை அதிகரிக்க உள்ளது. உள்நாட்டில், கார்களுக்கான தேவை பெருகி வருவதால், பரஸ்பரம் கடும் போட்டியை சந்தித்து வரும்.மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள், ஏற்றுமதியை குறைத்து, உள்நாட்டு விற்பனையை அதிகரிப்பது குறித்தும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
மகிந்திரா
இந்நிறுவனம், வழக்கமாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, விரிவாக்கத் திட்டங்களுக்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கும். இந்நிலையில், 2020 – 21ம் நிதியாண்டுக்குள், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும், தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் குறிப்பிடத்தக்க தொகை ஒதுக்கப்பட உள்ளது.
இந்நிறுவனம், அமெரிக்கசந்தைக்காக, ஆடம்பரமான, ‘ஆட்டோமொலிலி பினின்பரினா, ரோக்ஸர்’ கார்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. உள்நாட்டில், ‘பி.எஸ்., 4’ சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றி, கார்களை தயாரிக்கவும், புதிய டிராக்டர்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடும் போட்டி
இந்திய வாகன துறை, அதிக மூலதனம் தேவைப்படும் முக்கிய துறைகளில் ஒன்றாக உள்ளது. குறித்த கால இடைவெளியில், ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கும், உற்பத்தி திறன் மற்றும் விரிவாக்க வளர்ச்சி திட்டங்களுக்கும், மறு முதலீடு தேவைப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு, சில்லரை விற்பனை போன்ற துறைகளுக்கான சராசரி முதலீட்டு காலம், 20 ஆண்டுகளாக உள்ளன. ஆனால், வாகன துறை, சுற்றுச்சூழல் மாசுபாடு விதிமுறை, கடுமையான போட்டி போன்ற காரணங்களால், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, மறு முதலீடு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.பி.என்.பி., பரிபாஸ் இந்தியா
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|