பதிவு செய்த நாள்
09 ஆக2018
00:05
கம்பம்:கேரளா, இடுக்கி ஏலக்காய் விலை கிலோவிற்கு, 100 ரூபாய் வரை குறைந்து, 950 முதல் 980 ரூபாய் வரை விற்கப்படுவது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.
இந்திய ஏலக்காயில், பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, வளைகுடா நாடுகளில், இந்திய ஏலக்காய் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.மேலும், கலர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, செயற்கை கலர் கொடுத்த விவகாரமும் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. இதனால், இடுக்கி ஏலக்காய் ஏற்றுமதியில் கடும் சரிவை சந்தித்துள்ளது. விலையும் சரியத் துவங்கி உள்ளது.
ஜூலை, 27ல் சராசரி விலையாக கிலோவிற்கு, 1,137 ரூபாயாக இருந்தது. தற்போது கிலோவிற்கு, 980 ரூபாயாக குறைந்துள்ளது. பலத்த மழை, சூறாவளியில் இடுக்கி மாவட்டத்தின் ஏலத்தோட்டத்தில், செடிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால், மகசூலில்,50 சதவீதம் இழப்பு ஏற்படும் எனமதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், விலையும் சரிந்து வருவது, விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|