பதிவு செய்த நாள்
09 ஆக2018
00:15
புதுடில்லி:தேசிய அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க், இதர வங்கிகள், நிதி நிறுவனங்களுடன் இணைந்து, நிதிச் சேவைகளை வழங்க உள்ளன.
பிரதமர் மோடி, 21ம் தேதி, இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியை, அதிகாரபூர்வமாக துவக்கி வைக்க உள்ளார். இவ்வங்கி, 650 கிளைகளுடன் செயல்படும். அத்துடன், இந்தாண்டு இறுதிக்குள், நாட்டில் உள்ள, 1.55 லட்சம் தபால் அலுவலகங்களுடன்இணைந்து, நிதிச் சேவைகளை வழங்க உள்ளது.இதனால், கிராமப்புறங்களிலும், வங்கி, காப்பீடு, மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட நிதிச் சேவைகள் கிடைக்கும்.
இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க், கடன் வழங்குவதற்காக, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. காப்பீட்டு திட்டங்களை வினியோகிக்க, பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துடன், கூட்டு சேர்ந்து உள்ளது. இத்துடன், மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட நிதிச் சேவைகளுக்கும், பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்கில், ஒருவர், அதிகபட்சமாக, 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே டிபாசிட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|