பதிவு செய்த நாள்
10 ஆக2018
00:26
ற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்த்த, ஐ.எஸ்.ஓ., 9001, 14001 தரச்சான்றிதழ் பெறும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் முழுவதையும், தமிழக அரசு திரும்ப வழங்குகிறது என, தொழில் மற்றும் வணிகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், எம்.எஸ்.எம்.இ., துறையின் கீழ் பதிவு செய்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 18.5 லட்சம் உள்ளன. பதிவு செய்யாமல், தமிழகம் முழுவதும், 50 லட்சம் நிறுவனங்கள் செயல்படுவதாக, மத்திய அரசின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்த்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் தரத்தை உயர்த்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஐ.எஸ்.ஓ., 9001, 14001 தரச் சான்றிதழ்கள் பெற, நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அவ்வாறு பெறும் சான்றிதழுக்கு ஆகும் கட்டணச் செலவு முழுவதும், தமிழக அரசு திரும்ப வழங்க உள்ளது. இந்த புதிய திட்டம், நடப்பு ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், உற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்த்த முடியும் என, அரசு கருதுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|