பதிவு செய்த நாள்
10 ஆக2018
00:45
புதுடில்லி:இந்திய தொழிலக கூட்டமைப்பு, ஜே.எல்.எல்., நிறுவனத்துடன் இணைந்து, ரியல் எஸ்டேட் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பாண்டு, ஜன., – ஜூன் வரையிலான அரையாண்டில், ரியல் எஸ்டேட் துறையில், 24,011 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இதில், தகவல் தொழில் நுட்பம் மற்றும் வணிக வளாக துறை, 13,151 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. சில்லரை விற்பனை பிரிவில், 1,898 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
குடியிருப்பு, அலுவலகம், சில்லரை விற்பனை, முதலீடு உட்பட, ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து பிரிவுகளிலும், சிறப்பான வளர்ச்சி காணப்பட்டது. இத்தகைய போக்கு, வலுவான கட்டமைப்பு உள்ள ரியல் எஸ்டேட் துறை, மீண்டும் எழுச்சி கண்டு வருவதை காட்டுகிறது.இந்தாண்டின், முதல் அரையாண்டில், கார்ப்பரேட் நிறுவனங்களின் குத்தகை, கடந்த ஆண்டு, இதே காலத்தை விட, 54 சதவீதம் உயர்ந்துள்ளது.
நிறுவனங்களின் குத்தகை பரப்பு, 80 லட்சம் சதுர அடியில் இருந்து, 2.40 கோடி சதுர அடியாக உயர்ந்துள்ளது. அதுபோல, குடியிருப்பு பிரிவிலும், 25 சதவீத வளர்ச்சி காணப்பட்டது.ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், வீடு வாங்குவோரிடம் நம்பிக்கையை எற்படுத்தியுள்ளது. அதனால், முதலீடு அதிகரித்துள்ளது; சொத்துகளின் மதிப்பும் உயரத் துவங்கியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|