பதிவு செய்த நாள்
11 ஆக2018
00:13
சி.டி.எம்.ஏ., தொழில்நுட்ப மொபைல் சேவையை, செப்., 5 முதல் நிறுத்த, அனைத்து வட்டங்களுக்கும், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
தொலை தொடர்பு துறையில் ஆரம்ப காலகட்டத்தில், சி.டி.எம்.ஏ., எனும், ‘கோடு டிவிஷன் மல்டிபிள் ஆக்சிஸ்’ தொழில்நுட்ப மொபைல் சேவை செயல்பாட்டுக்கு வந்தது. பி.எஸ். என்.எல்., நிறுவனமும், தனியார் துறையில் ரிலையன்ஸ் நிறுவனமும் இந்த சேவையை வழங்கி வந்தன.
தற்போது, ஜி.எஸ்.எம்., எனும், ‘குளோபல் சிஸ்டம் பார் மொபைல் கம்யூனிகேஷன்’ தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது. இந்த தொழில்நுட்பங்களையே, அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன.
சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்தின் மூலம், குறிப்பிட்ட தொலை துாரத்துக்குள் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்தில், சர்வதேச அளவில் தொடர்பு கொள்ள முடியும்.இந்நிலையில், சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பம் பழமை ஆகிவிட்டதால், இந்த சேவையை நிறுத்த, பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பம் இந்தியா முழுவதும், சென்னை, தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மத்திய பிரதேசம் உட்பட, 19 தொலை தொடர்பு வட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது.இந்த தொழில்நுட்பம் பழமையானதாலும், இதில் அதிகமான வாடிக்கையாளர்கள் இல்லாத காரணத்தாலும், இந்த குறிப்பிட்ட சேவையை நிறுத்த, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, ஜி.எஸ்.எம்., தொழில் நுட்பத்துக்கு மாறும்படி கடிதம் மூலம் அறிவுறுத்தி வருகிறோம்.சென்னையில், 2,600 சி.எம்.டி.ஏ., வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளனர்.இதே போன்று, தமிழக வட்டத்திலும் குறைந்த அளவு வாடிக்கையாளர்களே உள்ளனர்.
எனவே, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களிலும், செப்., 5 முதல், சி.டி.எம்.ஏ., சேவையை நிறுத்தவும், புதிய சேவை வழங்க வேண்டாம் எனவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|