பதிவு செய்த நாள்
11 ஆக2018
00:16
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மின் துறையின் நிலக்கரி இறக்குமதி, 14 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து, மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பியுஷ் கோயல், பார்லிமென்டில் கூறியதாவது:நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், மின் துறையின் நிலக்கரி இறக்குமதி, 2017 -– 18ம் நிதியாண்டின் இதே காலாண்டை விட, 14 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த, 2014 – -15ம் நிதியாண்டில், நிலக்கரி இறக்குமதி, 21.77 கோடி டன்னாக இருந்தது. இது, 2016 -– 17ம் நிதியாண்டில், 19.09 கோடி டன்னாக குறைந்தது. ஆனால், கடந்த நிதியாண்டில், 20.80 கோடி டன்னாக அதிகரித்தது.மின் துறையின் நிலக்கரி இறக்குமதி தொடர்ந்து குறைந்து வருகிறது. உள்நாட்டில், நிலக்கரி சப்ளை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம்.
கடந்த, 2013 --– 14ம் நிதியாண்டில், நிலக்கரி உற்பத்தி, 56.57 கோடி டன்னாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில், 67.64 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இதன்படி, நான்கு ஆண்டுகளில், நிலக்கரி உற்பத்தி, 11.07 கோடி டன் உயர்ந்துள்ளது.அதேசமயம், 2009 – 10 முதல், 2013 -– -14 வரையிலான நான்கு நிதியாண்டுகளில், நிலக்கரி உற்பத்தி, 3.37 கோடி டன் என்ற அளவிற்கே அதிகரித்திருந்தது.
கோல் இந்தியா
பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தியும், ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது.இந்நிறுவனம், 2013 --– 14ம் நிதியாண்டில், 46.24 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்தது. இது, கடந்த நிதியாண்டில், 56.73 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் – ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி, 17.74 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொண்ட உற்பத்தியை விட, 14.1 சதவீதம் அதிகம்.இவ்வாறு அவர் கூறினார்.இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு, பல்வேறு அம்சங்கள் அடிப்படையில், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|