பதிவு செய்த நாள்
11 ஆக2018
00:21
சென்னை:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2018 – 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 4,876 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக, வங்கி இழப்பை கண்டு வருகிறது.
இது குறித்து, வங்கி வெளியிட்ட அறிக்கை:நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 4,876 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாராக் கடனுக்கு அதிக நிதி ஒதுக்கியதால், இந்த இழப்பு உண்டானது.கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், வங்கி, 2,005 கோடி ரூபாய் லாபமீட்டியது.
இதே காலத்தில் வங்கி யின் மொத்த வாராக் கடன், 13.17 சதவீதம் அதிகரித்து, 1.88 லட்சம் கோடியில் இருந்து, 2.13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அதேசமயம், மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் நிகர வாராக் கடன், 10.69 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய காலாண்டில், 10.91 சதவீதமாக இருந்தது.வருவாய், 62 ஆயிரத்து, 911 கோடியில் இருந்து, 65 ஆயிரத்து, 492 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|