பதிவு செய்த நாள்
12 ஆக2018
00:03
நாமக்கல்:கறிக்கோழி உற்பத்தி, 15 சதவீதம் அதிகரிப்பு, கொள்முதல் விலையை காட்டிலும், ஏழு ரூபாய் குறைத்து விற்பனை செய்வது உள்ளிட்ட காரணங்களால், வாரத்துக்கு, 30 கோடி ரூபாய், பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
பல்லடம்
தமிழகத்தில் உள்ள, 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொள்முதல் விலை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு, பி.சி.சி., சார்பில் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.ஜூலை, 1ல், 101; 6ல், 90; 10ல், 84; 15ல், 75; 20ல், 82; 25ல், 70 ரூபாய் என, படிப்படியாக குறைந்தது. நேற்று, எட்டு ரூபாய் சரிந்து, 62 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது.
இழப்பு
இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:வடமாநிலங்களில் ‘ஸ்ராவன்’ விரதம் கடைப்பிடிப்பதால், அங்கு நுகர்வு சரிந்துள்ளது. ஆனால், உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போது, வாரத்துக்கு, 2.25 முதல், 2.50 கோடி கிலோ உற்பத்தியாகிறது. இது, 15 சதவீதம் அதிகம்.
பண்ணையாளர்களுக்கு உற்பத்தி செலவு, 70 ரூபாயாகிறது. ஆனால், கொள்முதல் விலையில் இருந்து, ஏழு ரூபாய் குறைத்து கொள்முதல் செய்கின்றனர்.அதனால், பண்ணையாளர்களுக்கு, வாரம், 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. உற்பத்தியை குறைத்தால் மட்டுமே, பண்ணையாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|