ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலில் மாற்றம் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலில் மாற்றம் ... உற்­பத்தி துறை­யில் அதிக வேலை­வாய்ப்பு உற்­பத்தி துறை­யில் அதிக வேலை­வாய்ப்பு ...
மின்னணு வர்த்தக கொள்கை மறுபரிசீலனை ஒருமித்த கருத்துக்கு மத்திய அரசு முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
00:08

புதுடில்லி:மின்­னணு வர்த்­தக வரைவு கொள்கை குறித்து, சிலர் தெரி­வித்த மாறு­பட்ட கருத்­து­கள் கார­ண­மாக, மீண்­டும் பரி­சீ­லனை செய்ய, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.

மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­ச­கம், கடந்த மாதம், மின்­னணு வர்த்­த­கத்­திற்­கான வரைவு கொள்­கையை, அனைத்து தரப்­பி­ன­ரின் கருத்து கேட்­புக்­காக வெளி­யிட்­டது.

தலையிட கூடாது

அதில், ‘வலை­த­ளம் வாயி­லாக பொருட்­களை விற்­பனை செய்­யும் மின்னணு வணி­க­ நிறு­வ­னங்­கள், வாடிக்­கை­யாளர் தக­வல்­களை, இந்­தி­யா­வி­லேயே சேமிக்க வேண்டும்’என, தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.மேலும், வலை­தள சந்தை நிறு­வ­னங்­கள், நேர­டி­யா­கவோ அல்லது மறை­மு­க­மா­கவோ, பொருட்­க­ளின் விற்­பனை விலை­யில் தலை­யி­டக் கூடாது என்றும், வரை­வறிக்கை வலி­யு­றுத்­தி­யது.

அத்­து­டன், மின்­னணு வர்த்­தக நிறு­வ­னங்­கள் 'மெகா' தள்­ளு­ப­டி­கள் வழங்­கு­வதை அனு­ம­திக்க கூடாது ; சலு­கை­களை முன்­கூட்­டியே அறி­விக்க, கால வரம்பு நிர்­ண­யிக்க வேண்­டும் என்­பது உள்­ளிட்ட அம்­சங்­களும், அதில் இடம் பெற்­றி­ருந்­தன.மின்­னணு வணி­கத்­தில், உள்­நாட்டு நுகர்­பொ­ருட்­கள் விற்­பனை ஊக்­கு­விக்­கப்­பட வேண்­டும்.

இதற்­காக, சரக்கு கையிருப்பு அடிப்­ப­டை­யில், வலை­த­ளம் மூலம் உள்­நாட்டு பொருட்­கள் விற்­ப­னை­யில், 49 சத­வீத அன்னிய நேரடி முத­லீட்டை அனு­ம­திக்­க­லாம் என­வும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.மேலும், மின்­னணு வணி­கத்­தில், பணப் பரி­வர்த்­த­னை­க­ளுக்கு, மத்­திய அர­சின் 'ரூ பே' கார்டு பயன்­பாட்டை அதி­க­ரிப்­ப­தற்­கான வழி­மு­றை­களும், அறிக்­கை­யில் இடம் பெற்­றி­ருந்­தன.

மின்­னணு வணி­கத்தை ஒழுங்­கு­ப­டுத்­த­வும், அதே­ச­ம­யம், பாரம்­பரிய கடை­க­ளின் வர்த்­தக பாது­காப்பை வலி­யு­றுத்­திய வரைவு கொள்கை, குறு,சிறு,நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை வளர்ச்­சிக்கு உத­வும் என, அத்­துறை சார்ந்­த­வர்­கள் கருத்து கூறி­னர் .எனி­னும், ‘வாடிக்­கை­யா­ளர் தக­வலை இந்­தி­யா­வில் சேமித்து வைக்க, மிகப் பெரிய அள­வில் முத­லீடு தேவைப்­படும்; அது, மின்­னணு வணிக துறை வளர்ச்­சிக்கு வேகத் தடை­யாக இருக்­கும்’என­வும் கருத்துதெரி­விக்­கப்­பட்­டது.

உத்தரவு

இந்­நி­லை­யில், அனைத்து தரப்­பி­ன­ரின் ஆத­ரவை பெறும் வகை­யில், மின்­னணு வணிக வரைவு கொள்­கையை, மேலும் செம்­மைப்­ப­டுத்த மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.இதை­ய­டுத்து, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு, வரைவு அறிக்­கையை மறு­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு, அதி­கா­ரி­களுக்குஉத்­த­ர­விட்­டுள்­ளார்.

இது குறித்து, அமைச்சகம் 'டுவிட்­ட­ரில்' வெளி­யிட்­டுள்ள தக­வல்:மின்­னணு வரைவு கொள்­கை­யில், சிலர் மாறு­பட்ட கருத்­து­களை தெரி­வித்­துள்­ள­னர். இதை­ய­டுத்து, அனைத்து தரப்­பி­ன­ரி­டம் கலந்து பேசி, வரைவு கொள்­கையை மறு­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு, அதி­கா­ரி­க­ளுக்கு, அமைச்சர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

புதி­தாக தயா­ரிக்­கப்­படும் வரைவு கொள்கை, அமைச்­ச­ரின் அனு­ம­திக்கு பின், கருத்து கேட்­புக்­காக விரை­வில் வெளி­யி­டப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

அமேசான் – பிளிப்கார்ட்

தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளின் பொருட்­களை, நுகர்­வோ­ருக்கு விற்­கும் பால­மாக, பிளிப்­கார்ட், அமே­சான் இந்­தியா, ஸ்நாப்­டீல் போன்ற வலை­தள சந்தை நிறு­வ­னங்­கள் செயல்­ப­டு­கின்­றன.இச்­சே­வைக்கு, தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் கட்டணம் செலுத்­து­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)