பதிவு செய்த நாள்
12 ஆக2018
23:58
இணையம் வாயிலாக வேலைவாய்ப்புக்கு பணியாளர்களை அமர்த்துவதில், ஜூலை மாதத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வேலைவாய்ப்பு இணைய தளமான, ‘மான்ஸ்டர்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விபரம் வருமாறு:
மே மற்றும் ஜூன் மாதங்களில் இணையம் வாயிலான வேலைவாய்ப்பில் லேசான சரிவு உண்டானது. ஜூலை மாதம் இது அதிகரித்துள்ளது. எனினும், ஆண்டு அடிப்படையில் லேசான சரிவு உள்ளது.ஜூலை மாத வேலைவாய்ப்பு அதிகரிப்பிற்கு உற்பத்தி மற்றும் தயாரிப்பு துறை முக்கிய காரணமாக அமைந்துள்ளன. நிதி, தணிக்கை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகியவற்றில் ஊழியர் தேவை அதிகரித்துள்ளது.
ஆண்டு அடிப்படையில் சண்டிகர், ஜெய்பூர் மற்றும் கோவை ஆகிய நகரங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி, நிறுவனங்களை பணி அமர்த்தலில் ஈடுபட வைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|