பதிவு செய்த நாள்
13 ஆக2018
11:12
மும்பை : அமெரிக்காவுடனான பிரச்னை காரணமாக துருக்கியின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் துருக்கி அதிபர் தாயிப் எர்டகோன் கடுமையான பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.
இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஆக.,13 காலை 9.15 நிலவரம்) டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 69.62 என்ற நிலைக்கு சென்றுள்ளது. முன்னதாக கடந்த வார வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 68.84 ஆக இருந்தது.
சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|