பதிவு செய்த நாள்
14 ஆக2018
01:02
மும்பை:தேசாபிமான, ‘பிராண்டு’களில், எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், டாடா மோட்டார்ஸ், பதஞ்சலி, ரிலையன்ஸ் ஜியோ, பி.எஸ்.என்.எல்., ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
பிரிட்டனைச் சேர்ந்த, யுகவ் ஆம்னிபஸ், இந்தியாவில், 11 துறைகளைச் சேர்ந்த, 152 பிராண்டுகள் குறித்து, வலைதளத்தில் கருத்துக் கணிப்பு நடத்தியது.அது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:நிதித் துறையில், தேசாபி மான பிராண்டாக, எஸ்.பி.ஐ., முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு, 47 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்த இடத்தில், 16 சதவீதத்துடன்,எல்.ஐ.சி., உள்ளது. வாகன துறையில், டாடா மோட்டார்ஸ், பாரத் பெட்ரோலியம், மாருதி சுசூகி, முதல் மூன்று இடங்களைபிடித்துள்ளன.
உணவு துறையில், அமுல், பதஞ்சலி முதல் இரண்டு இடங்களில் உள்ளன. தனிநபர் பராமரிப்பு துறையில், பதஞ்சலி, டாபர், வீகோ நிறுவனங்கள்,முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.தொலை தொடர்பு துறையில், பி.எஸ்.என்.எல்., முதலிடத்தில் உள்ளது.இந்திய அளவில், தேசாபிமான பிராண்டுகளில், ரிலையன்ஸ் ஜியோ, பி.எஸ்.என்.எல்., ஆகியவை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|