பதிவு செய்த நாள்
14 ஆக2018
01:12
கோவை,:‘பருத்தி உற்பத்தியை இரு மடங்காக உயர்த்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரிக்கை விடப்பட்டு உள்ளது.‘உலகளாவிய பருத்தி சூழ்நிலை’ தலைப்பிலான கருத்தரங்கு, கோவையில், இந்திய பருத்தி கழகம் (ஐ.சி.எப்.,) சார்பில், வரும், 17, 18ம் தேதிகளில் நடக்கிறது.
இது குறித்து, கருத்தரங்க தலைவரும், ஐ.சி.எப்., துணைத் தலைவருமான நடராஜ் கூறியதாவது:கருத்தரங்கில், பல்வேறு உலக நாடுகள் மற்றும் நம் நாட்டில் இருந்தும், வர்த்தகர்கள், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். பருத்தி விளையும் பரப்பு, உற்பத்தி, தேவை மற்றும் விலை நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளோம். இதில் எடுக்கப்படும் முடிவுகள், அரசுக்கு கோரிக்கையாக அனுப்பப்படும்.வரும், 2025ம் ஆண்டு, பருத்தி சார்ந்த பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், பருத்தி உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. பருத்தி உற்பத்தியை இரு மடங்காக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஐ.சி.எப்., தலைவர் துளசிதரன், செயலர் அதுல் ஆஷர் உட்பட பலர்உடனிருந்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|