பதிவு செய்த நாள்
14 ஆக2018
01:15
புதுடில்லி:பிரபல வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான, சன்சேரா இன்ஜினியரிங், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
சன்சேரா இன்ஜினியரிங் நிறுவனம், 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. பங்குதாரர்கள் மற்றும் நிறுவனர்களின், ஒரு கோடியே, 72 லட்சத்து, 44 ஆயிரத்து, 328 பங்குகளை விற்பனைக்கு விடுக்க இருக்கிறது இந்நிறுவனம்.பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதன் மூலமாக, நிறுவனத்தின் பிராண்டு மதிப்பை உயர்த்திக் கொள்ளவும், நிறுவன மேம்பாட்டுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என, நிறுவனம் கருதுகிறது.பெங்களூரைச் சேர்ந்த இந்நிறுவனம், வானுார்திகள் மற்றும் வாகனங்களுக்கான தரம் மிகுந்த உதிரி பாகங்களை தயாரித்து வருகிறது.
பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், கிரெடிட் சூயிஸ் செக்யூரிட்டீஸ், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், நொமுரா பைனான்ஷியல் அட்வைஸரி அண்டு செக்யூரிட்டீஸ் மற்றும் பி.என்.பி. பரிபாஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன.சன்சேரா நிறுவனம் மட்டுமின்றி, டூட்லா டெய்ரி, நிஹிலென்ட், ஷியாம் மெட்டாலிக்ஸ், மற்றும் ஏ.எஸ்.கே., இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் என, இதுவரை நான்கு நிறுவனங்கள், இம் மாதத்தில் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, செபியிடம் விண்ணப்பித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|