பதிவு செய்த நாள்
15 ஆக2018
00:37
புதுடில்லி:மத்திய அரசு, பொதுத் துறையைச் சேர்ந்த, 6 நிறுவனங்களில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனை மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
வருவாய்
இது, கடந்த நிதியாண்டில் திரட்டியதை விட, 15 சதவீதம் அதிகம் என்பதுடன், நடப்பு நிதியாண்டில், பங்கு விற்பனை வருவாய், இலக்கை தாண்டி, 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், முதற்கட்டமாக, 6 நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, என்.எம்.டி.சி., மற்றும் இந்துஸ்தான் காப்பர் நிறுவனங்களில், தலா, 8 சதவீத பங்குகள் விற்கப்பட உள்ளன.
கோல் இந்தியா மற்றும் பி.எச்.இ.எல்., நிறுவனங்களில், தலா, 5 சதவீதம்; என்.டி.பி.சி., நிறுவனத்தில், 3 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படும்; எம்.எம்.டி.சி., நிறுவனத்தில், 15 சதவீத பங்குகள் விற்கப்படும்.
பங்கு மூலதனம்
மத்திய அரசு, 2014 ஏப்., – 2018 மார்ச் வரை, பொதுத் துறை நிறுவனங்களில், பங்கு மூலதனத்தை குறைத்து, 2.12 லட்சம் கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.இது, முந்தைய, 10 ஆண்டுகளில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையில் கிடைத்த தொகையை விட, அதிகம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|