6 பொது துறை நிறுவனங்களின்  பங்குகளை விற்க  அரசு முடிவு6 பொது துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு முடிவு ... மத்திய அரசிடம் ஜெட் ஏர்வேஸ் விளக்கம் மத்திய அரசிடம் ஜெட் ஏர்வேஸ் விளக்கம் ...
ஜி.எஸ்.டி.,யால் எளிதான வெளிநாட்டு வர்த்தகம் ‘வைப்ரன்ட்’ பொருட்காட்சியில் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2018
00:39

மதுரை:‘‘ஜி.எஸ்.டி., அம­லாக்­கத்­தால் இந்­தி­யா­வின் தென் பகு­தி­களில் கூட எளி­தாக வணி­கம் செய்ய முடி­கிறது,’’ என, நேபாள தொழில் வர்த்­தக சங்க தலை­வர், ராஜேஷ் காஷி ஷ்ரேஸ்தா கூறி­னார்.

மதுரை வேலம்­மாள் மருத்­து­வ­மனை, ஐடா ஸ்கட்­டர் வர்த்­தக மையத்­தில், தொழில் வர்த்­தக சங்க அறக்­கட்­டளை சார்­பில் நடக்­கும், ‘வைப்­ரன்ட் தமிழ்­நாடு’ என்ற வேளாண், உணவு வர்த்­தக பொருட்­காட்­சி­யில் அவர் பேசி­ய­தா­வது:இந்­தி­யா­வின் வட மாநி­லங்­களில் மட்­டுமே இது­வரை வர்த்­த­கம் செய்து வந்­தோம்.

போக்­கு­வ­ரத்து, ஏற்­று­மதி, இறக்­கு­மதி போன்­ற­வற்­றில் ஏற்­பட்ட இடை­யூ­று­க­ளால் தென் மாநி­லங்­களில் வர்த்­த­கம் செய்ய இய­ல­வில்லை. ஆனால், ஜி.எஸ்.டி., வந்த பின் எங்­க­ளுக்கு தென்­ன­கத்­தில் வர்த்­த­கம் செய்வது எளி­தா­கி­யுள்­ளது.தென்­மா­நில வர்த்­தக துவக்­க­மாக, இந்த கண்­காட்­சியை பார்க்­கி­றேன். இங்­குள்ள பல உணவு வகை­கள் நேபா­ளத்­தி­லும் உள்ளன. இந்த கண்­காட்சி மூலம் எங்­க­ளுக்கு நிறைய வர்த்­தக தொடர்­பு­கள் ஏற்­பட வாய்ப்பு உள்­ளது.இவ்­வாறு அவர் பேசி­னார்.

தொடர்ந்து சவுதி அரே­பியா, இலங்கை, மலே­ஷியா, கனடா, ஆஸ்­தி­ரே­லியா, இந்­தோ­னே­ஷியா உள்­ளிட்ட நாடு­களின் பிர­தி­நி­தி­களும், வர்த்­தக வாய்ப்­பு­கள் குறித்து பேசி­னர்.

சிலர் பகிர்ந்து கொண்ட அனு­ப­வங்­கள்:

கத்கா, நேபாளம்:இதில் பங்­கேற்­றது மிகச்­சி­றந்த அனு­ப­வம். ஆர்­கா­னிக் உணவு வகை­கள் குறித்த செயல் முறை விளக்­கங்­கள் பய­னுள்­ள­தாக இருந்­தன. வர்த்­தக சங்­கத்­தி­னர் அரு­மை­யான ஏற்­பாட்டை செய்­துள்­ள­னர்.

ஷங்கா, இலங்கை:இங்கு அனைத்து உணவு வகை­களும் இடம் பெற்­றுள்ளன. இது தென்­னிந்­திய மற்­றும் வெளி­நாட்டு உணவு வர்த்­த­கத்­திற்கு நல்ல தொடக்­கம்.

சுபாசன்யா கேவ்பான், தாய்லாந்து:சிறு­தா­னிய பிஸ்­கட் தயா­ரிப்பு போன்ற நல்ல ஆலோ­ச­னை­கள் கிடைத்­தன. சீனா போன்ற நாடு­களில், பெரும் முத­லீ­டுக்கு மட்­டும் தொழில் வசதி உள்­ளது. ஆனால், சிறு­வ­ணி­கர்­களும் தொழில் தொடங்க ஏது­வாக உள்­ள­தால் இங்கே வந்­துள்­ளேன்.

பய்குதா கொய்ராலா, நேபாளம்:முதன்­மு­றை­யாக இந்த வர்த்­தக பொருட்­காட்­சி­யில் கலந்து கொள்­கி­றேன்.தமிழ்­நாட்­டின் உணவு வர்த்­தக சங்க நிர்­வா­கி­களை சந்­தித்­த­தன் மூலம், அவர்­க­ளு­டன் இணைந்து புதிய உணவு வகை­களை விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்­து­வோம். இது வர்த்­தக வளர்ச்­சிக்கு பெரும் வழி­காட்­டி­யாக அமைந்­துள்­ளது.இவ்­வாறு அவர்­கள் தெரி­வித்­த­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)