பதிவு செய்த நாள்
15 ஆக2018
00:40
புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான, மேஸ்கான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வர, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், மேஸ்கான் டாக் ஷிப்பில்டர்ஸ், பங்கு வெளியீட்டுக்காக அனுமதி கோரி, செபியிடம் விண்ணப்பித்திருந்தது. பரிசீலனைக்கு பின், செபி தற்போது, பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வழங்கி உள்ளது.மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அதன் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், நடப்பு நிதியாண்டில், 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாகவே, மேஸ்கான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.ஏற்கனவே, மிஸ்ரா தத்து நிகாம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேஸ்கான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, எந்த நிதி நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது, பங்கு வெளியீட்டுக்கு என்று வருகிறது என்பது குறித்த விபரங்கள், இன்னும் வெளிவரவில்லை.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|