பதிவு செய்த நாள்
15 ஆக2018
00:42
புதுடில்லி:ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர், நரேஷ் கோயல், நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசிடம் விளக்கியதாக தகவல் வெளியாகிஉள்ளது.
கடந்த, 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தற்போது,11 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது.இந்நிலையில், 2017 -– 18ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை சந்தித்தது.இதன் காரணமாக, நிறுவனம், மூத்த அதிகாரிகளின் ஊதியத்தை, 25 சதவீதம் குறைத்தது. அத்துடன், விமானிகள், பொறியாளர்கள் ஆகியோரின் ஊதியத்தையும் குறைக்க திட்டமிட்டது.
ஆனால், கடும் எதிர்ப்பு காரணமாக, இத்திட்டத்தை கைவிட்டது. இந்நிலையில், நிறுவனத்திடம், இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே விமான சேவையை இயக்குவதற்கான நிதியாதாரம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.அதை மறுத்த ஜெட் ஏர்வேஸ், கடந்த நிதியாண்டின் நிதி நிலை அறிக்கையை, ஆக.,9ல் வெளியிடும்போது, அனைத்து விபரங்களும் தெரியவரும் என, கூறியது.
அதன்பின், ‘நிதிநிலை அறிக்கையில் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிஉள்ளதால், ‘ஆடிட்’ குழுவின் பரிந்துரை கிடைக்கவில்லை. அதனால் வெளியிடவில்லை’ என, சமாளித்தது.இத்தகைய சூழலில், நேற்று, ஜெட் ஏர்வேஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
நரேஷ் கோயல், மத்திய விமான போக்குவரத்து துறை செயலர், ஆர்.என்.சவுபேவை, சந்தித்து பேசியுள்ளார். அப்போது, நிறுவனம் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும், அதற்கு தீர்வு காண எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துரைத்தார். இதையடுத்து, நிதி திரட்டுவதற்காக, நரேஷ் கோயல் லண்டன் சென்று உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவன பிரச்னை காரணமாக, ஓராண்டுக்கு முன், 883 ரூபாயாக இருந்த, அதன் பங்கு விலை, தற்போது, 284 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|