பதிவு செய்த நாள்
16 ஆக2018
00:05
கோவை:பஞ்சு விலை அதிகரித்து வருவதால், நஷ்டத்தை தவிர்க்க, தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஸ்பின்னிங் மில்கள், ‘ஷிப்டு’களை குறைத்துள்ளன.
கடந்தாண்டு சீசன் துவக்கத்தில், 1 கண்டி (355.62 கிலோ), 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பஞ்சு, தற்போது, 53 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாவதால், ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சிரமமடைந்துள்ளனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும், கண்டிக்கு, 4,000 ரூபாய் அதிகரித்துள்ளது. நஷ்டத்தை தவிர்க்க, ஸ்பின்னிங் மில்களில், ஷிப்ட்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கோவை, ஸ்பின்னிங் மில் உரிமையாளர், ராஜேந்திரன் கூறியதாவது:பஞ்சு விலையேற்றத்துக்கு தகுந்தாற்போல், நுால் விலையில் ஏற்றம் இல்லாததால், நஷ்டத்தை தவிர்க்க, ஸ்பின்னிங் மில்களில், ஷிப்டுகளை குறைத்துஇருக்கிறோம்.பல மில்களில், சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. வரும் நவம்பர் மாதத்தில் தான், புதிய பஞ்சு வரத்து இருக்கும் என்பதால், அதுவரை இதே நிலை நீடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|