பதிவு செய்த நாள்
16 ஆக2018
00:09
புதுடில்லி:ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய, நேஷனல் ஹவுசிங் வங்கி நிர்வாக இயக்குனர், ஸ்ரீராம் கல்யாணராமன், ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமாவை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.
நாடு முழுவதும், தனி நபரும் சுலப தவணையில் வீட்டு வசதி கடன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், 1988, ஜூலை, 9ல், நேஷனல் ஹவுசிங் வங்கி துவக்கப்பட்டது.
முறைகேடு
ரிசர்வ் வங்கியின், 100 சதவீத பங்கு மூலதனத்தில், டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இவ்வங்கி, வீட்டு வசதி கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, நிதியுதவி அளிக்கிறது.அத்துடன், வீட்டு வசதி நிறுவனங்களின் செயல்திட்டங்களை கண்காணிக்கும், ஒழுங்குமுறை அமைப்பாகவும் செயல்படுகிறது.
இந்நிலையில், இவ்வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, ஸ்ரீனிவாசன் கல்யாணராமன் மீது, பல்வேறு நிர்வாக முறைகேடுகள், ஊழல்கள் குறித்து புகார்கள் எழுந்தன.அவற்றை, விசாரணைக்கு எடுத்துக் கொண்ட, ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு, கல்யாணராமனுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பியது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:டில்லி மற்றும் மும்பையில், கல்யாணராமன் முறைகேடாக, பல வீடுகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், வீட்டு வசதி நிறுவனங்களுக்கு மறுகடன் வழங்குவது, பணியாளர் நியமனம் போன்றவற்றிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
பாதிக்காது
இது குறித்து, ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு கோரிய விளக்கத்திற்கு, கல்யாணராமன் பதில் அனுப்பியுள்ளார். அத்துடன், ராஜினாமா கடிதமும் கொடுத்துள்ளார். அதை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.அவர் விலகியதால், விசாரணை பாதிக்கப்படாது. தொடர்ந்து நடைபெறும். பொதுத் துறை நிறுவனங்களில் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|