பதிவு செய்த நாள்
16 ஆக2018
00:12
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி, அதன் செயல் திட்டங்கள், புதிய சேவைகள், விழிப்புணர்வு பிரசாரங்கள் ஆகியவற்றை, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விளம்பரப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக, சமூக வலைதளங்களில், வங்கி குறித்த தகவல்களை பரப்பவும், தரவுகளை நிர்வகிக்கவும், தகுதியான முகமை நிறுவனத்தை தேடுகிறது.இவ்வங்கி, ஏற்கனவே, அதன் வலைதளம் மூலம், ‘யூ டியூப் மற்றும் டுவிட்டர்’ சமூக வலைதளங்களில் தொடர்பு ஏற்படுத்தி உள்ளது.
தற்போது, வங்கி நடத்தும் நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பிரசாரங்கள், புதிய சேவைகள் உள்ளிட்டவற்றை, அனைத்து சமூக வலைதளங்கள் வாயிலாக, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க, தீர்மானித்துஉள்ளது.
இதற்காக, ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், லிங்க்டுஇன், யூ டியூப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் ‘பிளாக்’குகளில், கனரா வங்கி கணக்கை நிர்வகிப்போர் தேவை என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.‘விருப்பமுள்ள நிறுவனங்கள், வங்கி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விபரங்களின்படி, வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என, கனரா வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|