பதிவு செய்த நாள்
16 ஆக2018
23:49
சேலம் : தமிழகம், கேரளாவில் பெய்யும் அடை மழையால், மார்க்கெட்டுகளுக்கு ஏலக்காய், மிளகு வரத்து சரிந்ததால், விலை உயர்ந்தது.
கேரளாவின் நான்கு மாவட்டங்கள்; தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான, தேனி மாவட்டம் – பட்டிவீரன்பட்டி; ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி ஆகிய இடங்களில் விளைவிக்கப்படும் மிளகு, தமிழக மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு வருகிறது. கேரளாவின் இடுக்கி, கண்ணுார் உட்பட எட்டு மாவட் டங்களிலிருந்து, ஏலக்காய், தமிழக மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு வருகிறது.
ஆனால், கேரளா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் அடை மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலை போக்கு வரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு வரும் மிளகு, ஏலக்காய் வரத்து, சில நாட்களாக முற்றிலும் இல்லை. இதனால், தட்டுப்பாடு ஏற்பட்டு, நேற்று மிளகு விலை, கிலோவுக்கு, 40 ரூபாய், ஏலக்காய் விலை, கிலோவுக்கு, 100 ரூபாய் உயர்ந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|