பதிவு செய்த நாள்
17 ஆக2018
23:23
புதுடில்லி : பொதுத்துறை நிறுவனமான, ‘கெய்ல், ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும், சூரிய ஒளி மின் ஆலைகளை அமைப்பதற்கும், மின் வாகனங்களின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான நிலையங்கள் அமைப்பதற்குமான பணிகளில் ஈடுபட உள்ளது.
இந்நிறுவனம், எரிவாயு, பெட்ரோகெமிக்கல் ஆகியவற்றை தவிர்த்து, வேறு சில துறைகளிலும் இறங்கி, வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சூரிய ஒளி மின்சாரம், மின் வாகனங்களுக்கான பேட்டரிகளை சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் உள்ளிட்ட வணிகங்களில் ஈடுபட உள்ளது. வரும், 2030க்குள், அனைத்து வாகனங்களையும் மின் வாகனங்களாக மாற்ற, அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், அதற்கேற்ப வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான நிலையங்களை அமைப்பது, இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில், இத்துறையில் கால்பதிக்க இருக்கிறது, கெய்ல். மேலும், எரிபொருள் துறை சார்ந்த, ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்ய திட்டமிடுகிறது. குறிப்பாக, இயற்கை எரிவாயு, எரிசக்தி, பெட்ரோகெமிக்கல்ஸ் துறைகளில் ஈடுபடும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்புகிறது.
இவை மட்டுமின்றி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தண்ணீர் வினியோகம், பெரிய அளவிலான தண்ணீர் குழாய் பதிப்புகள் போன்ற வணிகத்திலும் இறங்க திட்டமிடுகிறது. இவை அனைத்தையும் செய்வதற்கான ஆள் பலமும், தொழில்நுட்ப பலமும் நிறுவனத்திடம் இருப்பதாக, கெய்ல் தெரிவித்துள்ளது. கெய்ல் நிறுவனத்தின், 34வது ஆண்டு பொதுக்கூட்டம், செப்., 1ல் நடக்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|