பதிவு செய்த நாள்
19 ஆக2018
05:39
புதுடில்லி: இன்போசிஸ் நிறுவனத்தின், தலைமை நிதி அதிகாரி பதவியில் இருந்து, எம்.டி.ரங்கநாத் ராஜினாமா செய்துள்ளார்.இவர், 18 ஆண்டுகளாக, இன்போசிஸ் நிறுவனத்தில், ஆலோசனை, நிதி, திட்டம், இடர்ப்பாடு மேலாண்மை, இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளில், பணியாற்றியுள்ளார்.கடந்த, 2015ல், இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரி, ராஜீவ் பன்சால் பதவி விலகிய பின், அந்த பொறுப்பை, ரங்கநாத் ஏற்றார்.'புதிய துறைகளில். தொழில் வாய்ப்புகளை அடையாளம் காணும் நோக்கில், ரங்கநாத், பதவி விலகியுள்ளார். எனினும், அவர், நவ., 16 வரை பணியாற்றுவார்' என, இன்போசிஸ் தெரிவித்துள்ளது.அடுத்து, புதிய தலைமை நிதி அதிகாரியை தேர்வு செய்யும் பணியை, இன்போசிஸ் நிர்வாக குழு துவக்கியுள்ளது.இது குறித்து ரங்கநாத் கூறியதாவது:கடந்த மூன்று ஆண்டு களாக, நிறுவனத்தின் இக்கட்டான தருணத்தில், தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றியதில் பெருமை அடைகிறேன். உலகத் தரத்தில், நிதிக் குழுவை உருவாக்கி, ஸ்திரமான நிதி அறிக்கைகளை வெளியிட்டு, நிறுவனத்தின் போட்டித் தன்மையை வலுப்படுத்தியுள்ளோம். இதன் மூலம், பங்கு முதலீட்டாளர்களின் மதிப்பை உயர்த்தியுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|