பதிவு செய்த நாள்
19 ஆக2018
05:40
‘ஜிம் – 2’ எனும் இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், எம்.எஸ்.எம்.இ., துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுமா என, தொழில் துறையினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னையில், 2019ம் ஆண்டு, ஜனவரி 23, 24ம் தேதிகளில், இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.இதற்காக, பல்வேறு வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன், தமிழக தொழில் வளர்ச்சி மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள், தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.ஆனால், எம்.எஸ்.எம்.இ., எனும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:முதல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், எம்.எஸ்.எம்.இ., துறைக்கு, துவக்கத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதன் பின், துறை அதிகாரிகள் முயற்சி எடுத்து, 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 10 ஆயிரத்து, 532 ஒப்பந்தங்கள் பெற்று தந்தனர்.மேலும், முதல் மாநாட்டில், எம்.எஸ்.எம்.இ., சார்பில், 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, துறை வலிமை வெளிப்படுத்தப்பட்டது. இரண்டாவது மாநாட்டில், எம்.எஸ்.எம்.இ.,க்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, எதிர்பார்க்கிறோம். எம்.எஸ்.எம்.இ., சார்பில், 32 மாவட்டங்களிலும் கருந்தரங்குகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இருந்தாலும், ஜிம் – 2 தொடர்பாக உரிய வழிகாட்டுதல்கள் இருந்தால், கடந்த ஆண்டை விட அதிக முதலீடுகள் பெற முடியும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|