ஜிம்– 2: தொழில் துறையினர் எதிர்பார்ப்புஜிம்– 2: தொழில் துறையினர் எதிர்பார்ப்பு ... குறு, சிறு நிறுவன கடன் வளர்ச்சி சரிவு : பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.,யால் ஏற்றுமதி குறைந்தது குறு, சிறு நிறுவன கடன் வளர்ச்சி சரிவு : பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.,யால் ... ...
‘நிதி சேவை நிறுவனங்களுக்கு ‘சைபர் செக்யூரிட்டி’ முக்கியம்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2018
05:40

மும்பை: ''நிதிச் சேவை­களை வழங்­கும் நிறு­வ­னங்­கள், 'சைபர் செக்­யூ­ரிட்டி' எனப்­படும் கணினி பரி­வர்த்­த­னை­களின் பாது­காப்பை பலப்­ப­டுத்த, முக்­கி­யத்­து­வம் அளிக்க வேண்­டும்,'' என, ரிசர்வ் வங்கி கவர்­னர், உர்­ஜித் படேல் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.அவர், மும்­பை­யில், மின்­னணு தொழில்­நுட்­பத்­தில், மொபைல்­போன் மூலம் பணப் பரி­வர்த்­த­னை­களை செய்ய உத­வும், ‘யு.பி.ஐ.,–2’ என்ற, மேம்­ப­டுத்­தப்­பட்ட, ‘ஆப்’ ஐ வெளி­யிட்டு மேலும் பேசி­ய­தா­வது:இந்­தி­யா­வில், தற்­போது, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­களில், சிறப்­பான வளர்ச்சி காணப்­ப­டு­கிறது.இது, ரிசர்வ் வங்கி துவக்க காலத்­தில் எடுத்த, கணினி சார்ந்த ஒருங்­கி­ணைப்பு திட்­டங்­க­ளால், சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது.இந்­தி­யா­வின், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை கட்­ட­மைப்பு, பிற நாடு­கள் பின்­பற்­றும் அள­விற்கு, தரத்தை நிர்­ண­யிக்­கக் கூடி­ய­தா­க­வும், சிறப்­பான வழி­மு­றை­களை கொண்­ட­தா­க­வும் திகழ்­கிறது.ரிசர்வ் வங்­கி­யின் விதி­மு­றை­கள், நிதிச் சேவை துறை­யில் போட்­டித் தன்­மையை அதி­க­ரித்து, பணப்­ப­ரி­வர்த்­த­னை­களில் புதிய முறை­களை உரு­வாக்க துணை புரி­யும்.அனைத்து மக்­களும், பாது­காப்­பான மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­பது தான், நம் இலக்கு. அதற்கு, 'யு.பி.ஐ.,' போன்ற 'ஆப்'கள் தொடர்ந்து உத­வும்.அத்­த­கைய சூழ­லில், கணினி வாயி­லான தக­வல்­கள், பணப் பரி­வர்த்­த­னை­கள் ஆகி­ய­வற்­றின் பாது­காப்பை பலப்­ப­டுத்­து­வ­தற்கு, நிதிச் சேவை நிறு­வ­னங்­கள் முக்­கி­யத்­து­வம் அளிக்க வேண்­டும். கணினி ஒருங்­கி­ணைப்­பில், மிக வலி­மை­யா­க­வும், அவற்­றுக்­கான செல­வி­னங்­களில் எவ்­வித சம­ர­சத்­திற்­கும், இட­ம­ளிக்­கா­ம­லும் இருக்க வேண்­டும்.நிதிச் சந்­தைக்­கான ஒழுங்­கு­முறை விதி­கள், வலு­வான கட்­ட­மைப்பு, வாடிக்­கை­யா­ளர் சார்ந்த திட்­டங்­கள், ஒட்­டு­மொத்த மேற்­பார்வை ஆகி­ய­வற்றை ரிசர்வ் வங்கி பார்த்­துக் கொள்­ளும்.மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­களின் பாது­காப்பு, வாடிக்­கை­யா­ளர் குறை தீர்ப்பு நட­வ­டிக்­கை­கள், சேவை­க­ளுக்கு நியா­ய­மான கட்­ட­ணங்­கள் ஆகி­ய­வற்­றில் கவ­னம் செலுத்­தும் பொறுப்பு, நிதிச் சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)