ராணுவ தளவாடங்கள் சப்ளை: குறு, சிறு நிறுவனங்களுக்கு வாய்ப்புராணுவ தளவாடங்கள் சப்ளை: குறு, சிறு நிறுவனங்களுக்கு வாய்ப்பு ... 300 கோடி ரூபாய் ஜவுளி பணம் பாக்கி 300 கோடி ரூபாய் ஜவுளி பணம் பாக்கி ...
‘பிட்காய்ன்’ முதலீட்டில் ரூ.22,000 கோடி இழப்பு : மோசடி நிறுவனத்தில் ஏமாந்த கறுப்பு பண முதலைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2018
02:03

சூரத்: குஜ­ராத்­தைச் சேர்ந்த பெரும் பணக்­கா­ரர்­கள், வலை­த­ளங்­களில் புழங்­கும்,‘பிட்­காய்ன்’ கரன்­சி­யில் முத­லீடு செய்து, 22 ஆயி­ரம் கோடி ரூபாய் ஏமாந்­தது அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. இத்­தொகை, கறுப்பு பணம் என்­ப­தால், ‘திரு­ட­ருக்கு தேள் கொட்­டி­யது’ போல, போலீ­சில் புகார் அளிக்­கா­மல் உள்­ள­தாக பலர் கூறப்­ப­டு­கிறது.கடந்த, 2016 நவ., 8ல் பண­ம­திப்பு நீக்க அறி­விப்பு வெளி­யா­னது. இதை­ய­டுத்து, கூகுள் வலை­த­ளத்­தில், ‘கறுப்பு பணத்தை எப்­படி மாற்­ற­லாம்’ என தேடி­ய­தில், குஜ­ராத் மாநி­லம் முத­லி­டத்­தைப் பிடித்­த­தாக செய்தி வெளி­யா­னது.ஏரா­ள­மா­னோர், கறுப்பு பணத்தை பிட்­காய்ன் கரன்­சி­யில் முத­லீடு செய்­த­னர். இத்­த­கைய முத­லீட்­டி­லும், குஜ­ராத் முத­லி­டம் வகித்­தது.கவர்ச்சி திட்டங்கள் அந்­தாண்டு இறு­தி­யில், பிரிட்­ட­னில், ‘பிட்­க­னெக்ட்’ என்ற வலை­தள நிறு­வ­னம், வலை­தள கரன்சி சந்­தையை துவக்­கி­யது. இந்­நி­று­வ­னம், கவர்ச்­சி­க­ர­மான திட்­டங்­கள் மூலம், பிட்­காய்ன் முத­லீட்­டா­ளர்­களை ஈர்த்­தது.
‘பிட்­கா­யினை அட­மா­னம் வைத்­தால், தின­மும், 1 சத­வீ­தம் வட்டி தரு­வ­தா­க­வும், முத­லீடு, 100 நாட்­களில் இரு மடங்கு உய­ரும்’ என­வும் உறுதி அளித்­தது. இந்த திட்­டங்­களில் மூன்­றாம் நபரை சேர்த்­தால், கூடு­தல் வட்டி தரப்­படும் என­வும், பிட்­க­னெக்ட் ஆசை காட்­டி­யது. அடகு வைக்­கும் பிட்­கா­யி­னுக்கு ஈடாக, பி.சி.சி., என்ற வலை­தள கரன்­சியை, பிட்­க­னெக்ட் வழங்­கி­யது.பிட்­காய்ன் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு திரும்ப அளிக்­கும் அசல், வட்டி வரு­வாய் உள்­ளிட்­டவை, இந்த கரன்சி கணக்­கில் தான் வரவு வைக்­கப்­பட்­டன.அதா­வது, முத­லீட்­டா­ளர்­களை பொறுத்­த­வரை, பிட்­கா­யி­னில் முத­லீடு செய்­வது போல தோன்­றி­னா­லும், அவர்­க­ளின் உண்­மை­யான முத­லீடு, பி.சி.சி., கரன்­சி­யில் தான் நடை­பெற்­றது.இந்­நி­லை­யில், 2017ல், பிட்­காய்ன், பி.சி.சி., கரன்­சி­கள் மதிப்பு, ‘கிடு­கி­டு’­வென உயர்ந்­தது. ஆனால், இந்­தாண்டு துவக்­கத்­தில், பிட்­காய்ன் மதிப்பு சரிந்­தது. இதன் தாக்­கத்­தால், பி.சி.சி., உட்­பட, இதர வலை­தள கரன்­சி­களும் வீழ்ச்சி கண்­டன.
மூடுவிழா : இத்­து­டன், பிரிட்­டன் அர­சின் நெருக்­க­டிக்கு ஆளான, பிட்­க­னெக்ட் நிறு­வ­னம், திடீ­ரென வலை­தள கரன்சி சேவை, கடன் பிரிவு ஆகி­ய­வற்றை மூடு­வ­தாக அறி­வித்­தது.முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, பணம் திரும்­பத் தரப்­படும் என, தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால், அதற்­கான அறி­குறி ஏதும் இல்லை. கடந்த ஆண்டு, பி.சி.சி., கரன்சிமதிப்பு, 437 டால­ராக இருந்­தது. இது, தற்­போது, 30 டால­ராக வீழ்ச்சி கண்­டுள்­ளது.இத­னால், பிட்­க­னெக்ட் மூலம் பிட்­கா­யி­னில் முத­லீடு செய்த, குஜ­ராத்­தைச் சேர்ந்த பணக்­கா­ரர்­க­ளுக்கு மட்­டும், 22 ஆயி­ரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக, நிதிச் சந்தை ஆய்­வா­ளர்­கள் மதிப்­பிட்­டுள்­ள­னர்.
யாருக்­கும் தெரி­யாது : குஜ­ராத் மாநி­லம், சூரத் நக­ரம், வலை­தள கரன்சி வர்த்­த­கத்­தின் மைய­மாக உள்­ளது. இங்கு, ஏரா­ள­மான பங்கு தர­கர்­கள், அதிக லாப நோக்­கில், பல்­வேறு வலை­தள கரன்­சி­களில் முத­லீடு செய்­துள்­ள­னர். வலை­தள கரன்சி பரி­வர்த்­த­னை­களை யார் நிர்­வ­கிக்­கின்­ற­னர் என்­பது தெரி­யாது. உல­கின் எந்த இடத்­தில் இருந்­தும், இந்த கரன்­சி­க­ளின் பரி­வர்த்­த­னை­யில் ஈடு­ப­ட­லாம். ஒரு கரன்­சி­யின் மதிப்பு, ஒரே வாரத்­தில் கூட உச்­சத்­திற்கு செல்­லும். அதற்­கான கார­ணம் யாருக்­கும் தெரி­யாது. இது, அபா­ய­க­ர­மான முத­லீடு
சன்னி வகேலா, தகவல் தொழில்நுட்ப வல்லுனர்
ஏற்­றம் – இறக்­கம் : வலை­தள கரன்­சி­யான பிட்­காய்ன் மதிப்பு, 2016, ஜூலை­யில், 600 டால­ராக இருந்­தது. இது, 2017 துவக்­கத்­தில், 750 ஆக உயர்ந்­தது. அதன் பின், அந்­தாண்­டில், மதிப்பு கிடு­கி­டு­வென உயர்ந்து, 20 ஆயி­ரம் டாலர் வரை சென்­றது. இந்­தாண்டு துவக்­கம் முதல் சரிவை சந்­தித்த பிட்­காய்ன் மதிப்பு, தற்­போது, 6,000 டால­ரில் வர்த்­த­க­மாகி வரு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)