பதிவு செய்த நாள்
22 ஆக2018
00:42
ஈரோடு : ‘‘கேரளா, கர்நாடகாவில், தொடர் மழை மற்றும் வெள்ளத்தால், ஜவுளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி பாக்கி, 300 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது,’’ என, ஈரோடு மாவட்ட ஜவுளி விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தயாரிக்கப்படும், பெட்ஷீட், துண்டு, ஆயத்த ஆடைகள் உட்பட பல்வேறு ஜவுளி ரகங்கள், கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு, அனுப்பி வைக்கப்படும். கடனுக்கு வழங்கப்படும் ஜவுளிக்கு, 15 நாள் முதல், மூன்று மாதங்கள் வரையிலான காலக்கெடுவுக்கு பின், தொகை பெறப்படும்.
கடந்த, 25 நாட்களுக்கு மேலாக, இரு மாநிலங்களிலும், கடும் மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே அனுப்பிய ஜவுளிகளுக்கு, தொகை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அங்கிருந்து புதிய ஜவுளி ஆர்டர்களும் வரவில்லை. மொத்தம், 300 கோடி ரூபாய்க்கு மேல், ஜவுளிக்கான பணம் வர வேண்டியுள்ளது.
மழையால், ஓணம் பண்டிகை விற்பனையும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்ட ஜவுளி வியாபாரிகள், பண நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|