பதிவு செய்த நாள்
22 ஆக2018
00:50
புதுடில்லி : ‘‘ரூபாய் மதிப்பின் சரிவை விட, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்திருப்பது தான் கவலை அளிக்கிறது,’’ என, ‘நிடி ஆயோக்’ அமைப்பின் துணைத் தலைவர், ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
அவர், இந்திய தொழிலக கூட்டமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: ரூபாய் மதிப்பு உயர்ந்தால், பயன் கிடைக்கும் என்ற கண்ணோட்டம் மாற வேண்டும். ரூபாய் மதிப்பை உயர்த்துவதும், அரசுக்கு மிகக் கடினமாக இருக்கும். அதை விட, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு குறித்து தான், நான் அதிகம் கவலைப்படுகிறேன். தற்போது உள்ள சூழலில், ஏற்றுமதியை உயர்த்த தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், நிதிப் பற்றாக்குறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. அதுபோல, நாமும் நடந்து கொள்ள வேண்டும். மாநில அரசுகளின் திட்டத் துறைகள் ஒவ்வொன்றும், ‘நிடி ஆயோக்’ போல செயல்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 10,850 கோடி டாலரில் இருந்து, 15,680 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|