ஓ.என்.ஜி.சி., விதேஷ் நிறுவனம் பங்கு வெளியிட அரசு கோரிக்கைஓ.என்.ஜி.சி., விதேஷ் நிறுவனம் பங்கு வெளியிட அரசு கோரிக்கை ... இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தமிழகத்தில் ரூ.37,000 கோடி முதலீடு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தமிழகத்தில் ரூ.37,000 கோடி முதலீடு ...
வங்கிகள், அரசின் நிதி இருப்பை விழுங்கி விடும்; அரசின் பங்கு மூலதன உதவி குறித்து, ‘மூடிஸ்’ எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2018
00:53

புதுடில்லி : ‘மத்­திய அர­சின் பங்கு மூல­தன உத­வி­யால், பொதுத் துறை வங்­கி­கள், மூல­தன இருப்பை சமா­ளிக்­க­லாம் என்­றா­லும், அவற்­றின் இடர்ப்­பாட்டு கடன் பிரச்னை நீடிக்­கும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் இன்­வெஸ்­டர்ஸ் சர்­வி­சஸ்’ தெரி­வித்­து உள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டு உள்ள அறிக்கை: மத்­திய அரசு, துவக்­கத்­தில் மதிப்­பிட்­டதை விட, வங்­கி­க­ளின் மூல­தன பற்­றாக்­குறை அதி­க­ரித்­துள்­ளது. எனி­னும், மறு பங்கு மூல­தன திட்­டம், வாராக் கடன் ஒதுக்­கீடு, கடன் வளர்ச்சி போன்­ற­வற்­றால், பொதுத் துறை வங்­கி­க­ளின் மூல­தன இருப்பு விகி­தம், நிர்­ண­யிக்­கப்­பட்ட வரம்பை எட்­டும்.

பங்கு மூல­த­னத்தை ஈர்ப்­ப­தன் மூலம், 2019 மார்ச்­சுக்­குள், அனைத்து பொதுத் துறை வங்­கி­க­ளின், மூல­தன இருப்பு விகி­தம், குறைந்­த­பட்­சம், 8 சத­வீ­தத்தை தொடும். இது, ‘பேசல்–3’ விதி­மு­றை­யில், இந்­தி­யா­வுக்கு நிர்­ண­யித்­துள்ள குறைந்­த­பட்ச அள­வான, 5.5 சத­வீ­தத்தை விட, 2.5 சத­வீ­தம் அதி­கம். அத­னால், இந்­திய வங்­கி­கள், சர்­வ­தேச வங்­கி­க­ளுக்கு நிக­ரான பங்கு மூல­தன இருப்பை கொண்­டி­ருக்­கும்.

கடன் வளர்ச்சி :
பொதுத் துறை வங்­கி­கள், மூல­த­னத்தை அதி­க­ரிக்­கும் சவாலை சமா­ளிக்க, மத்­திய அர­சின் மறு பங்கு மூல­தன திட்­டம் உத­வும். எனி­னும், மூல­தன இருப்பு விகி­தத்தை தக்க வைத்­துக் கொள்ள, வங்­கி­க­ளின் கடன் வளர்ச்சி, 5 -– 6 சத­வீ­த­மாக இருக்க வேண்­டும். அத்­து­டன், அகற்­றப்­பட்ட வாராக் கடன் பிரி­வில், அதிக அள­வில் இடர்ப்­பாட்டு கடன்­கள் சேரா­மல் பார்த்­துக் கொள்­வ­தும் அவ­சி­யம். அவ்­வாறு சேரும்­பட்­சத்­தில், கூடு­தல் நிதி ஒதுக்­கீட்­டிற்கு, அதிக அள­வில் மூல­த­னம் தேவைப்­படும். மத்­திய அர­சின் உதவி, மூல­தன இருப்பு விகித உயர்வு ஆகி­யவை, வங்­கித் துறைக்கு தற்­கா­லிக நிவா­ர­ண­மா­கவே இருக்­கும்.

சீர்திருத்தங்கள் :
வங்­கி­கள், இடர்ப்­பாட்டு கடன்­களை, ‘அகற்­றப்­பட்ட கடன்’ பிரி­விற்கு மாற்­று­வது குறைய வேண்­டும். அதற்­கான அடிப்­படை சீர்­தி­ருத்­தங்­கள் செய்­யப்­பட வேண்­டும். அவ்­வா­றின்றி, வங்­கி­கள் இடர்ப்­பாட்டை சந்­திக்­கும் போதெல்­லாம், மத்­திய அரசு பங்கு மூல­தன உதவி செய்­தால், அது, அர­சின் நிதி இருப்பை விழுங்கி விடும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

பங்கு மூலதனம் :
இந்­திய வங்­கி­கள், 2019, ஏப்.,௧ முதல்,‘பேசல்–3’ விதி­மு­றைப்­படி, 8 சத­வீத மூல­தன இருப்பு விகி­தத்தை பரா­ம­ரிக்க வேண்­டும். வாராக் கட­னுக்கு அதிக நிதி ஒதுக்­கு­வ­தால், பொதுத் துறை­யைச் சேர்ந்த, பெரும்­பான்மை வங்­கி­கள், கடந்த நிதி­யாண்­டில், இழப்பை சந்­தித்­துள்­ளன. அத­னால், ‘பேசல்–3’ விதி­மு­றையை பின்­பற்­று­வது, பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு பெரும் சவா­லாக இருக்­கும் என்­ப­தால், மத்­திய அரசு, மறு பங்கு மூல­தன திட்­டத்­தின் கீழ் உதவ முன்­வந்­தது.

அதன்­படி, பொதுத் துறை வங்­கி­க­ளுக்­கான, 2.11 லட்­சம் கோடி ரூபாய் பங்கு மூல­த­னத்­தில், இந்­தாண்டு மார்ச் வரை, 90 ஆயி­ரம் கோடி ரூபாய் வழங்­கப்­பட்­டுள்­ளது. நடப்பு நிதி­யாண்­டிற்கு நிர்­ண­யித்த, 65 ஆயி­ரம் கோடி ரூபா­யில், ஜூலை­யில், பஞ்­சாப் நேஷ­னல் வங்கி உள்­ளிட்ட, ஐந்து வங்­கி­க­ளுக்கு, 11,300 கோடி ரூபாய் அளிக்­கப்­பட்­டது. எஞ்­சிய தொகை, நடப்பு நிதி­யாண்­டிற்­குள் அளிக்­கப்­பட உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)