பதிவு செய்த நாள்
23 ஆக2018
02:32
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், தமிழகத்தில் பல்வேறு திட்டங்களில், 37,112 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரிவு செயல் இயக்குனர், ஆர்.சித்தார்த்தன் கூறியதாவது: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தை கையாள, கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். குழாய் மூலம் எண்ணெய் அனுப்புவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும், பெட்ரோலியப் பொருட்கள், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றுக்கான முனையங்கள் அமைக்கப்படும். இத்திட்டங்கள், 7,112 கோடி ரூபாய் முதலீட்டில், அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
ஐ.ஓ.சி.,யின் துணை நிறுவனமான, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், நரிமணம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் உற்பத்தி திறனை, ஆண்டுக்கு, 90 லட்சம் டன்னாக உயர்த்த உள்ளது. எண்ணுாரில், 5,151 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள, திரவ இயற்கை எரிவாயு முனையம், வரும் டிசம்பரில் செயல்பாட்டிற்கு வரும். இங்கிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு எரிவாயு சப்ளை செய்வதற்கான குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|