பதிவு செய்த நாள்
23 ஆக2018
02:33
காங்கேயம் : கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கால், காங்கேயத்தில் தேங்காய் எண்ணெய் வர்த்தகத்தில், 60 கோடி ரூபாய்க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், வெள்ளகோவில், குண்டடம், முத்துார், மூலனுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட தேங்காய் உலர் கலங்கள் உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் உற்பத்தியாகும் தேங்காய், கொப்பரைகள் இங்கு கொண்டு வரப்பட்டு, உலர் கலங்கள் மூலம் காய வைக்கப்படுகின்றன. பின், 50க்கும் மேற்பட்ட ஆலைகள் மூலம் எண்ணெயாக பிழிந்து, பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
கேரளாவிற்கு தினமும், 20 டேங்கர் லாரிகளில் தேங்காய் எண்ணெய் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதனால் தினமும், நான்கு கோடி ரூபாய் அளவில் வர்த்தம் நடந்து வந்தது. இந்நிலையில், 15 நாட்களாக கேரளாவில் வரலாறு காணாத வகையில் பெய்த மழையால், காங்கேயத்தில் இருந்து தேங்காய் எண்ணெய் அனுப்புவது, அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை, 60 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர், அருணாச்சலம் கூறியதாவது: கடந்த ஆண்டில், வறட்சியால் தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது, மெல்ல மீண்டும் வரும் நிலையில், கேரளாவில் பெய்த கன மழையால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த, 15 நாட்களில் காங்கேயத்தில், 60 கோடி ரூபாய் அளவில் தேங்காய் எண்ணெய் தொழில் பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|