பதிவு செய்த நாள்
23 ஆக2018
02:34
புதுடில்லி : நோக்கியா பிராண்டில், ஸ்மார்ட் போன்களை வடிவமைத்து, விற்பனை செய்து வரும், எச்.எம்.டி.குளோபல் நிறுவனம், இந்தியாவில் அதன் உற்பத்தியை அதிகரித்து, வருவாயை இரட்டிப்பாக்க திட்டமிடுகிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, புளோரியன் சீஷே கூறியதாவது: எங்களது எதிர்கால வளர்ச்சிக்கு, இந்தியா மிக முக்கியமான இடமாகும். நாங்கள் உற்பத்தியை அதிகரிக்க, தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம். மேலும் விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இந்த ஆண்டில் வருவாயும், உற்பத்தியும் இரு மடங்காக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். பியூச்சர் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கு இந்தியா மிகச் சிறந்த சந்தையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
எச்.எம்.டி.குளோபல் நிறுவனம், பாக்ஸ்கான் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, சென்னையில் போன்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 என இரண்டு ஸ்மார்ட் போன்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்த போன்கள் இந்திய சந்தையில் கிடைக்கும் எனத் தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|