பதிவு செய்த நாள்
23 ஆக2018
02:35
பெங்களூரு : ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், புதுப்பிக்கப்பட்ட பழைய பொருட்களுக்காக தனி சேவையை துவக்கி உள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனம், டூகுட் எனும், புதுப்பிக்கப்பட்ட பொருட்களுக்கான சேவையை துவக்கி உள்ளது. இந்த சேவை, மொபைல் போன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக, டூகுட் மூலம், ஸ்மார்ட் போன்கள், லேப்டாப், டேப்லெட் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கலாம். விரைவில், பெரிய அளவில் இதர பொருட்களும் சேர்க்கப்பட உள்ளன.
விலையைப் பொறுத்தவரை, ஒரிஜினல் புதிய பொருட்களுடன் ஒப்பிடுகையில், பொருட்களின் தன்மையை பொறுத்து, 50 முதல், 80 சதவீதம் அளவுக்கு வித்தியாசம் இருக்கும் எனத் தெரிகிறது.
இது குறித்து, பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: நாட்டில் புதுப்பிக்கப்பட்ட பொருட்களுக்கான சந்தை, முறைப்படுத்தாத ஒன்றாக இருக்கிறது. நாங்கள் அதை முறைப்படுத்தப்பட்டதாகவும், நம்பிக்கைக்குரிய ஒன்றாகவும் மாற்ற விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
டூகுட் அறிமுகத்துக்காக, பிளிப்கார்ட் அண்மையில், இபே நிறுவன செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|