பதிவு செய்த நாள்
23 ஆக2018
02:37
மும்பை : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சார், அவ்வங்கி குழுமத்தைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் நிறுவனத்தில், மீண்டும் இயக்குனராக நியமிக்கப்படுவார் என, தெரிகிறது.
இந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவில், சுழற்சி முறையில் ஓய்வுபெற்ற சந்தா கோச்சார், தற்போது மீண்டும் இயக்குனராக, விருப்பம் தெரிவித்து உள்ளார். அவரின் கோரிக்கை தொடர்பான தீர்மானம், வரும், 30ல் நடைபெற உள்ள ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில், முன்வைக்கப்படும். அதற்கு, பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், சந்தா கோச்சார் மீண்டும் இயக்குனராக நியமிக்கப்படுவார் என, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோகான் நிறுவனத்திற்கு, 3,600 கோடி ரூபாய் கடன் வழங்கிய விவகாரம் தொடர்பாக, சந்தா கோச்சார், ஜூன், 19 முதல் விடுப்பில் உள்ளார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு, வீடியோகான் கடன் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|