பதிவு செய்த நாள்
24 ஆக2018
23:20
புதுடில்லி : நாட்டின் மிகப்பெரிய வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
பயணங்களின் போது வாகனங்களில் பிரச்னை ஏற்பட்டால், உடனே மோட்டார் பைக்கில் விரைந்து வந்து சரி செய்து தருவதற்கு வசதியாக, புதிய குழுவை அமைத்துள்ளது, மாருதி.
இது குறித்து, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, கெனிச்சி அயுகவா கூறியதாவது: வாடிக்கையாளர்களுக்கு விரைந்து உதவுவதற்காக, முதற்கட்டமாக, 251 நகரங்களில், 350 பைக்குகள், இந்த விரைவு பழுது நீக்கும் பணிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 2020 இறுதிக்குள், 500 நகரங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.
போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் தற்போதைய சூழலில், இந்த ஏற்பாட்டின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவையை வழங்க முடியும். இத்தகைய சேவை, வாடிக்கையாளர்களின் சவுகரியத்தை அதிகரிக்கும் என உறுதியாக நம்புறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாருதி சுசூகி நிறுவனத்துக்கு, மாதம் ஒன்றுக்கு, வாடிக்கையாளர்களிடமிருந்து சாலை ஓர உதவி கேட்டு, 10 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|