பதிவு செய்த நாள்
24 ஆக2018
23:22
சென்னை : ஐ.எம்.டி.எம்.ஏ., எனப்படும், இந்திய இயந்திர கருவி உற்பத்தியாளர்கள் சங்கத்தின், தேசிய உற்பத்தித் திறன் உச்சி மாநாடு, சென்னையில் நடைபெற்றது. இது, 12வது மாநாடு ஆகும்.
உச்சி மாநாட்டை, முருகப்பா குழுமத்தின் செயல் தலைவர், எம்.எம்.முருகப்பன் மற்றும் யுகால் பியூயல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் செயல் சாரா இயக்குனர், டாக்டர் வி.சுமந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த மாநாட்டில், முருகப்பன் பேசியதாவது: உலகின் மிகப்பெரிய உற்பத்திப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் இன்று, நிறுவனங்கள் தங்கள் திறனை அதிகரிக்கும் வகையில், அன்றாட நடவடிக்கைகளை டிஜிட்டலுக்கு மாற்றி வருகின்றன. இந்த சூழலில், இதுபோன்ற மாநாடுகள், வணிக வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் வி.சுமந்திரன் கூறியதாவது:ஏற்றுமதி நிறுவனங்கள், நவீன உயர் தொழில்நுட்பங்களை கையாள வேண்டும். இதன் மூலம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு, உற்பத்தி நிறுவனங்கள் கைகொடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாநாட்டில், ஐ.எம்.டி.எம்.ஏ.,வின் தலைவர், பி.ராமதாஸ், மற்றும் தலைமை செயல் அதிகாரி, வி.அன்பு ஆகியோரும் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|