தேசிய உற்பத்தி திறன் 12வது உச்சி மாநாடுதேசிய உற்பத்தி திறன் 12வது உச்சி மாநாடு ... ரூபாய் மதிப்பு திடீர் மாற்றம்; நல்லது அல்ல: எஸ்.பி.ஐ., ரூபாய் மதிப்பு திடீர் மாற்றம்; நல்லது அல்ல: எஸ்.பி.ஐ., ...
‘எல் அண்டு டி’ பொதுக்குழுவில் களேபரம்.. அடங்காத முதலீட்டாளர்கள்; பொறுமை இழந்த நாயக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2018
23:23

மும்பை : ‘எல் அண்டு டி’ நிறு­வ­னத்­தின் பொதுக்­குழு கூட்­டத்­தில், முத­லீட்­டா­ளர்­கள் கேட்ட கேள்­வி­க­ளால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

மருத்­து­வ­மனை :
இந்­நி­று­வ­னத்­தின், 73வது ஆண்டு பொதுக்­குழு கூட்­டம், மும்­பை­யில் நேற்று நடை­பெற்­றது. அதில், எல் அண்டு டி நிறு­வ­னத்­தின் செயல் சாரா தலை­வர், ஏ.எம்.நாயக், புற்­று­நோ­யால் மறைந்த தன் பேத்தி நினை­வாக கட்­டப்­படும் மருத்­து­வ­மனை குறித்து, உதய் தீக் ஷித் என்ற முன்­னாள் ஊழி­யர் கேள்வி எழுப்­பி­னார். ‘‘எல் அண்டு டி நிறு­வ­னத்­தின் தொழிற்­சா­லைக்­காக வாங்­கிய இடத்தை, மருத்­து­வ­மனை மற்­றும் குடி­யி­ருப்­புக்­காக எப்­படி ஒதுக்­க­லாம்?’’ என, உதய் தீக் ஷித் கேட்­டார்.

அப்­போது, ‘‘மருத்­து­வ­மனை, நிறு­வ­னத்­தின் பாரம்­ப­ரிய பெரு­மையை நிலை­நாட்­டும்,’’ என, ஏ.எம்.நாயக் தெரி­வித்­தார். அதில் திருப்தி அடை­யா­மல், தீக் ஷித் உள்­ளிட்ட சில பங்கு முத­லீட்­டா­ளர்­கள் தொடர்ந்து பேசி­னர். அப்­போது, எல் அண்டு டி நிர்­வாக இயக்­கு­னர், எஸ்.என்.சுப்­ர­ம­ணி­யன் குறுக்­கிட்டு, ‘‘அனைத்து விதி­மு­றை­க­ளின் படி, மருத்­து­வ­மனை கட்­டு­வ­தற்­கான ஒப்­பு­தல் பெறப்­பட்­டுள்­ளது.

‘‘இந்த மருத்­து­வ­ம­னை­யில், எல் அண்டு டி ஊழி­யர்­கள் மட்­டு­மின்றி, பொது­மக்­களும் மருத்­துவ சேவை பெற­லாம்,’’ என்­றார். அதை ஏற்­கா­மல், சில பங்கு முத­லீட்­டா­ளர்­கள் தொடர்ந்து கூச்­ச­லிட்­ட­னர். இத­னால், பொறு­மை­யி­ழந்த நாயக், ‘‘இது, பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளின் கூட்­டம். தனிப்­பட்ட பிரச்­னை­களை இங்கு கொண்டு வர முடி­யாது. மற்­ற­வர்­கள் பேசட்­டும்; தொடர்ந்து இடை­யூறு செய்­வோர், காவ­லர்­கள் மூலம் வெளி­யேற்­றப்­ப­டு­வர்,’’ என, எச்­ச­ரித்­தார். இது, கூட்­டத்­தி­னரை மேலும் எரிச்­ச­ல் ஊ­ட்­டி­யது.

நான்கு முறை போனஸ் :
நிலைமை மேலும் மோச­மா­வதை தடுக்க, சுப்­ர­ம­ணி­யன் குறுக்­கிட்டு பேசி­னார். நாயக், நிறு­வ­னத்­தில், 52 ஆண்­டு­க­ளாக விடுப்பு எடுக்­கா­மல் ஆற்­றிய சேவை­களை எடுத்­துக் கூறி, நான்கு முறை போனஸ் வழங்­கி­யது; தற்­போது, 9,000 கோடி ரூபாய்க்கு பங்­கு­களை திரும்­பப் பெறு­வது, டிவி­டெண்டு வழங்­கு­வது உள்­ளிட்­ட­வற்றை எடுத்­து­ உரைத்­தார்.

அப்­போ­தும் அடங்­காத சில முத­லீட்­டா­ளர்­கள், ‘பங்­கு­களை திரும்­பப் பெறும் திட்­டத்­தின் கீழ், பங்­கு­களை அளிக்க விருப்­ப­மில்லை’ என, கோஷ­மிட்­ட­னர். இதை­ய­டுத்து, ‘‘சர்ச்­சைக்­கு­ரிய நிலம், நிறு­வ­னம் வசமே இருக்­கும். அனைத்து ஆவ­ணங்­க­ளை­யும், முத­லீட்­டா­ளர்­கள் பார்­வை­யி­ட­லாம்,’’ என, சுப்­ர­ம­ணி­யன் கூறி, களே­ப­ரத்தை முடி­வுக்கு கொண்டு வந்­தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)