பதிவு செய்த நாள்
25 ஆக2018
23:36
புதுடில்லி: ‘தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்’ என, ‘நிடி ஆயோக்’ முதன்மை ஆலோசகர், ரத்தன் பி.வாட்டல் தலைமையிலான குழு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தங்கம் கடத்தலை கட்டுப்படுத்த, தற்போது, 10 சதவீதமாக உள்ள, இறக்குமதி வரியை குறைக்க வேண்டும். தங்க ஆபரண ஏற்றுமதியாளர்களுக்கு, 3 சதவீத, ஐ.ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கலாம். மேலும், தங்க ஆபரணங்களுக்கு வசூலிக்கும், 3 சதவீத, ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும்.தங்க சேமிப்பு பத்திரங்கள் திட்டத்தை மறுசீரமைப்பது அவசியம். அத்துடன், தங்க வாரியம் மற்றும் தங்க பரிவர்த்தனை சந்தைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.வங்கிகளில், தங்க சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். அதில், வாடிக்கையாளர் டிபாசிட் தொகைக்கு ஏற்ப, சேமிப்பு கணக்கில், குறைந்தபட்சம், 1 கிராம் தங்கம் வரவு வைக்கும் வசதி செய்யப்பட வேண்டும்.வெளிமாநிலங்களில் இருந்து, தங்கம் பெற்று, ஆபரணங்களாக உருவாக்கி, திரும்ப அளிக்கும் பணியில் உள்ளோருக்கு, ஜி.எஸ்.டி., பதிவில் விலக்கு அளிக்கலாம்.தற்போது, ஜி.எஸ்.டி., வரம்பு, ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை, அந்தந்த துறைகளுக்கு ஏற்ப, தயாரிப்பு மற்றும் விற்பனையில், கூட்டப்படும் சராசரி மதிப்பின்படி நிர்ணயிக்கும் முறையை அறிமுகப்படுத்தலாம்.ஆபரணங்களை பழுதுபார்ப்பதற்கான, ஜி.எஸ்.டி., 18 சதவீதத்தில் இருந்து, 3 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.தங்கம் முன்பேர வர்த்தகத்தில், பரிவர்த்தனை வரியை நீக்கலாம். தங்கம் சார்ந்த முதலீடுகளுக்கு, மூலதன ஆதாய வரியில் விலக்கு அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|