நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் காணாமல் போகும்  ரிசர்வ் வங்கி துணை கவர்னர்  எச்சரிக்கைநகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் காணாமல் போகும் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ... ... பங்குச்சந்தை: மதிப்­பு­சார் முத­லீடு ஒன்றே வழி பங்குச்சந்தை: மதிப்­பு­சார் முத­லீடு ஒன்றே வழி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மூத்த குடி­ம­கன் சேமிப்பு திட்­டத்­தில் முத­லீடு செய்­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
23:20

எஸ்.சி.எஸ்.எஸ்., என சுருக்­க­மாக குறிப்­பி­டப்­படும், மூத்த குடி­ம­கன்­க­ளுக்­கான சேமிப்பு திட்­டம், சிறு­சே­மிப்பு திட்­டங்­களில் பிர­ல­மான ஒன்­றாக இருக்­கிறது. 60 வய­துக்கு மேற்பட்டோருக்கு, ‘ரிஸ்க்’ இல்­லாத வகை­யில், சீரான வரு­மா­னம் பெற இந்த திட்­டம் உத­வு­கிறது. இந்த திட்­டத்­தின் பலன்­கள் மற்­றும் முத­லீடு செய்­யும் வழி­மு­றை­கள்:

யாருக்கு
மூத்த குடி­ம­கன்­கள் சேமிப்பு திட்­டம், 60 வயது மேற்­பட்­ட­வர்­க­ளுக்­கா­னது. இருப்­பி­னும் குறிப்­பிட்ட சூழ­லில், 60 வய­துக்கு குறை­வா­ன­வர்­களும் இதில் இணை­ய­லாம். 55 வய­தில் விருப்ப ஓய்வு பெற்­ற­வர் இதில் இணை­ய­லாம். ஆனால் ஓய்­வூ­திய பலன் கிடைத்த ஒரு மாதத்­தில், தொகையை முத­லீடு செய்ய வேண்­டும். ஓய்வு பெற்ற ராணு­வத்­தி­னர், 50 வய­தில் இணை­ய­லாம்.

-முதிர்வு காலம்
இந்த திட்­டத்­திற்­கான முதிர்வு காலம், 5 ஆண்­டு­கள். அதன் பிறகு தேவை எனில் நீட்­டித்­துக்­கொள்­ள­லாம். முதிர்வு ஆன ஓராண்டு காலத்­திற்­குள் இதற்கு விண்­ணப்­பிக்க வேண்­டும். அஞ்­ச­ல­கம் மற்­றும் இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும் வங்­கி­களில் சேர­லாம். காலாண்டு அடிப்­ப­டை­யில் வட்டி வரு­மா­னம் வழங்­கப்­படும்.

வரம்பு என்ன
ஒரு­வர் ஒன்­றுக்கு மேற்­பட்ட கணக்­கு­களை துவக்­க­லாம்; ஆனால், மொத்த தொகை, 15 லட்­சம் ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது. அது அதிக பட்ச முத­லீடு. தனியே அல்­லது கூட்டு கணக்­காக துவங்­க­லாம். வாழ்க்கை துணை­யு­டன் மட்­டும் தான் இணைந்து துவங்க முடி­யும். முதல் மனு­தா­ர­ரின் வயதே கணக்­கில் எடுத்­துக்­கொள்­ளப்­படும்.

வட்டி விகி­தம்
இந்த திட்­டம் பாது­காப்­பான முறை­யில் சீரான வரு­மா­னம் அளிக்க கூடி­யது. இதற்­கான வட்டி விகி­தம் தற்­போது, 8.3 சத­வீ­த­மாக இருக்­கிறது. மற்ற சிறு­சே­மிப்பு திட்­டங்­கள் போலவே, காலாண்­டிற்கு ஒரு முறை வட்டி விகி­தம் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது. ஓய்­வூ­திய தொகைக்கு ஏற்ப மொத்­த­மாக அல்­லது பிரித்து முத­லீடு செய்­ய­லாம்.

வரிச்­ச­லுகை
இந்த திட்­டத்­தில் முத­லீடு செய்­யப்­படும் தொகைக்கு வரு­மான வரிச்­ச­லுகை பொருந்­தும். 80 சி பிரி­வின் கீழ், 1.50 லட்­சம் ரூபாய் தொகைக்­கான வரிச்­ச­லுகை பெற­லாம். முதிர்வு காலத்­திற்கு முன், தேவை எனில் தொகையை விலக்கி கொள்­ள­லாம். ஓராண்­டிற்கு பின் விலக்கி கொண்­டால், தொகை­யில், 1.5 சத­வீ­தம் பிடித்­தம் செய்­யப்­படும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)