நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் காணாமல் போகும்  ரிசர்வ் வங்கி துணை கவர்னர்  எச்சரிக்கைநகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் காணாமல் போகும் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ... ... பங்குச்சந்தை: மதிப்­பு­சார் முத­லீடு ஒன்றே வழி பங்குச்சந்தை: மதிப்­பு­சார் முத­லீடு ஒன்றே வழி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பங்­கு­களை விற்­கும் போது கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
23:27

பங்குகளை வாங்கும் போது எப்படி, முறையான ஆய்வு தேவையோ, அதே போல, பங்குகளை விற்க தீர்மானிக்கும் போதும் பல்வேறு அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்.

முத­லீடு செய்­வது என்­பது பல்­வேறு அம்­சங்­களை கொண்­டது. சரி­யான முத­லீட்டை தேர்வு செய்ய, அது தரக்­கூ­டிய பலன், முத­லீடு கால அளவு, ‘ரிஸ்க்’ அம்­சம் உள்­ளிட்ட அம்­சங்­களை பரி­சீ­லிக்க வேண்­டும். பங்­கு­கள் என்று வரும்போது, சரி­யான பங்­கு­களை தேர்வு செய்ய முறை­யான ஆய்வு செய்ய வேண்­டும் என, வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது. பங்­கு­கள் ஆய்வு தொடர்­பாக எண்­ணற்ற வழி­காட்­டு­தல் குறிப்­பு­களும் இருக்­கின்­றன.

ஆனால் முத­லீடு செய்­வ­தில், நிதி சாத­னங்­கள் தேர்வு, அவற்­றுக்­கான காலம் மற்­றும் விற்­பனை ஆகிய அம்­சங்­களும் முக்­கி­யம். ஒரு பங்கை விட்டு வெளி­யேற, சரி­யான தரு­ணத்தை அறிந்­தி­ருக்க வேண்­டும். பங்­கு­களை வாங்­கு­வது போலவே, விற்­பது தொடர்­பான முடி­வும் முக்­கி­ய­மா­னது. பொது­வாக பங்­கு­களை வாங்­கு­வதற்­கான ஆய்வு தொடர்­பாக வலி­யு­றுத்­தப்­ப­டு­வது போல, பங்­கு­கள் விற்­பனை செய்­வது தொடர்­பாக, அதிக குறிப்­பு­கள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. எனி­னும் இது­வும் முக்­கி­யம்.

பலன் ஆய்வு :
எனவே பங்­கு­களை விற்­பனை செய்­வ­தற்­கான சரி­யான நேரத்தை அறிந்­தி­ருக்க வேண்­டும். எனி­னும் இங்கு முத­லீடு நோக்­கில் வாங்­கப்­பட்ட பங்­கு­கள் தான் குறிப்­பி­டப்­ப­டு­கின்­ற­ன. ஷார்ட் செல்­லிங் எனும் முறை அல்ல. நிறு­வன வர்த்­த­கத்­தின் அடிப்­ப­டை­யில் தான் பங்­கு­களில் முத­லீடு செய்­கி­றோம். ஆனால் எந்த வர்த்­த­க­மும் உள்­ளூர் மற்­றும் உலக சூழ­லின் தாக்­கத்­திற்கு உள்­ளாக கூடி­யது. ஒரு சில வர்த்­த­கங்­கள் மோச­மான சூழலை தாக்­குப்­பி­டிக்க கூடி­யவை என்­றா­லும், சில வர்த்­த­கங்­கள் பாதிப்­புக்கு உள்­ளா­க­லாம். இது போன்ற சூழல்­களில், முத­லீட்­டா­ளர்­கள், விற்­ப­னைக்­கான உத்­தியை தீர்­மா­னித்­தி­ருக்க வேண்­டும்.

சில நேரங்­களில் எதிர்­பார்த்­த­தற்கு முன்­ன­தா­கவே பங்­கு­கள் பலன் அளிக்­க­லாம். அதா­வது, எதிர்­பார்க்­கப்­பட்ட காலத்­திற்கு முன்­னரே அதன் மதிப்பு கணி­ச­மாக உண­ர­லாம். சந்­தை­யில் காளை போக்கு நில­வும் போது இவ்­வாறு நிக­ழ­லாம். இது போன்ற நேரங்­களில் அடிப்­ப­டை­களை மீறி, அதன் மதிப்பு அமைந்­தி­ருக்­க­லாம். ரிஸ்க் மற்­றும் பரி­சுக்­கான விகி­த­மும் பங்கை வாங்­கிய சூழ­லில் இருந்து மாறி­இ­ருக்­க­லாம். இது விலை அல்­லது கால கரெக்­‌ஷ­னுக்கு வித்­தி­ட­லாம்.

இதற்கு மாறாக, சில நேரங்­களில் வாங்­கிய பங்­கு­கள் எதிர்­பார்த்த விதத்­தில் பலன் அளிக்­கா­மல் போக­லாம். பங்­கு­களை வாங்­கிய ஆய்­வுக்கு ஏற்ப பலன் அமை­யா­மல், கணி­ச­மாக குறை­ய­லாம். எனவே, பங்கு ஆய்­வின் அடிப்­ப­டை­யி­லான முடி­வில் மாற்­றம் தேவையா... என, யோசிக்க வேண்­டும். அதா­வது பங்கை விற்­பது பொருத்­த­மாக இருக்­குமா... என, யோசிக்க வேண்­டும்.

சூழல் மாற்­றம் :
வர்த்­தக சூழ­லில் ஏற்­பட்ட மாற்­றம் கார­ண­மாக, பங்கு எதிர்­காலத்­தில் உத்­தே­சித்த பலனை அளிக்­காத நிலை ஏற்­ப­ட­லாம். அல்­லது அர­சின் பாத­க­மான கொள்கை முடி­வால் எதிர்­பார்த்த பலன் கிடைக்­கா­மல் போகும் சூழல் நில­வ­லாம். நிறு­வ­னம் மேற்­கொள்­ளும் நிர்­வாக முடி­வு­களும், இதே போன்ற தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­லாம். இது போன்ற சூழல்­க­ளி­லும், ஆரம்ப ஆய்வு முடி­வில் மாற்­றம் தேவையா என, பரி­சீ­லிக்க வேண்­டும்.

பொது­வாக, முழு­வ­தும் முத­லீடு செய்­தி­ருக்­கும் போது, புதி­தாக நல்ல முத­லீட்டு வாய்ப்பு வரும் போது பழைய வாய்ப்பை விட்டு வெளி­யேற நினைப்­பது இயல்­பா­னது. ஆனால், புதிய வாய்ப்பை கவ­ன­மாக பரி­சீ­லிக்க வேண்­டும். சந்தை ஏறி இறங்­கும் இயல்­பு­டை­யது என்­ப­தால், பங்­கு­களை விற்ற பின், அதன் மதிப்பு உய­ர­லாம் என்­ப­தை­யும் அறிந்­தி­ருக்க வேண்­டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)