பங்குச்சந்தை: மதிப்­பு­சார் முத­லீடு ஒன்றே வழிபங்குச்சந்தை: மதிப்­பு­சார் முத­லீடு ஒன்றே வழி ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 69.71 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 69.71 ...
பாது­காப்­பு­டன் கூடு­தல் வட்டி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
23:38

வங்கி வைப்பு நிதி­கள் மீது, மத்­தி­ய­மர்­க­ளுக்­குத் தீராக் காதல் உண்டு. கடந்த சில ஆண்­டு­க­ளாக, வங்கி சேமிப்­பு­க­ளுக்கு கிடைத்து வந்த வட்டி விகி­தம் மிக­வும் குறைவு. தற்­போது, ஒரு சில பெரிய பொதுத் துறை, பன்­னாட்டு வங்­கி­கள் லேசாக வட்­டியை உயர்த்­தி­யுள்­ளன. ஆனால், இவை தரு­வதை விட, புதிய வகை வங்­கி­கள் கூடு­தல் வட்­டியை வழங்­கு­கின்­றன. அவை பாது­காப்­பா­ன­வையா...

இந்­தி­யா­வில் முத­லீடு செய்­யும் மத்­தி­ய­மர்­க­ளுக்கு லேசான பயம் உண்டு. அவர்­க­ளது சேமிப்­பு­கள் மிகச் சிறி­யவை. தேவைப்­படும் போது அவற்றை எடுத்து பயன்­ப­டுத்த வேண்­டும். பல ஆண்­டு­கள் வங்­கி­களில் போட்டு வைத்­தி­ருக்­க­வும் முடி­யாது. அடுத்த சில ஆண்­டு­க­ளி­லேயே, ஏதே­னும் ஒரு தேவை கழுத்தை நெரித்­து­வி­ட­லாம்.இப்­ப­டிப்­பட்ட நிலை­யில், எல்­லா­ரும் போய் நிற்­பது பொதுத் துறை அல்­லது தனி­யார் துறை வங்­கி­கள் வாச­லில் தான். வைப்பு நிதித் திட்­டங்­கள் தான் நம்­பிக்­கை­யான புக­லி­டம். ஓய்­வு­பெற்­ற­வர்­கள், முதி­யோர் தம் வாழ்­நாள் சேமிப்­பு­களை வங்­கி­களில் போட்டு வைத்து, சிறுக சிறுக வட்டி பெற்று வரு­வது, நம் நடுத்­த­ரப் பொரு­ளா­தார யதார்த்த காட்­சி­களில் முக்­கி­ய­மா­னது.

கடந்த சில ஆண்­டு­க­ளாக வட்டி விகி­தங்­கள் குறைந்து வந்­தன. மொத்­தப் பொரு­ளா­தா­ரத்­தைக் கருத்­தில் கொண்­டும், தொழில் வளர்ச்­சிக்கு உத­வும் வித­மா­க­வும் ரெப்போ விகி­தங்­கள் குறை­வாக வைக்­கப்­பட்டு இருந்­தன.அத­னால், வைப்பு நிதித் திட்­டங்­க­ளுக்கு கிடைத்து வந்த வட்­டி­களும் குறைந்­தன. வேறு வழி­யில்­லா­மல், பல­ரும் வேறு முத­லீட்டு வாய்ப்­பு­களை நோக்கி நகர்ந்­த­னர். கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக பரஸ்­பர சகாய நிதி­களில், ஒவ்­வொரு மாத­மும் சேமிப்­பு­கள் அதி­க­ரித்து வரு­வது இத­னால் தான். குறைந்­த­பட்­சம், 8 முதல், 10 சத­வீத வரு­வா­யை­யா­வது ஈட்ட முடி­யாதா என்ற ஏக்­கத்­தில் தான், பல­ரும் மியூச்­சு­வல் பண்­டு­களை நோக்கி நகர்ந்­த­னர்.

இன்­னும் கொஞ்­சம் தைரி­ய­சா­லி­கள், நேர­டி­யா­கவே பங்­குச் சந்தை முத­லீ­டு­களில் ஈடு­பட்­ட­னர். அவர்­களில், லார்ஜ் கேப் பங்­கு­களில் முத­லீடு செய்­த­வர்­கள் தப்­பித்­த­னர். மிட்­கேப், ஸ்மால்­கேப் பங்­கு­களில் முத­லீடு செய்­த­வர்­கள் நிலையோ, அந்தோ பரி­தா­பம். பங்­குச் சந்தை குறி­யீட்­டெண்­கள் மட்­டும், ஒரு பக்­கம் வர­லாறு காணாத முன்­னேற்­றத்­தைக் காண்­கின்­றன. ஆனால், பணப்­பு­ழக்­க­மும் வளர்ச்­சி­யும் பர­வ­லாக எல்லா பங்­கு­க­ளி­லும் பிர­தி­ப­லிக்­க­வில்லை.தங்­கத்­தில் முத­லீடு செய்­தோர் உண்டு. அது, கெட்­டி­யான சேமிப்பு தான். அவ­ச­ரத் தேவை­க­ளுக்கோ, சுல­ப­மாக செல­வு­க­ளைச் சந்­திப்­ப­தற்கோ உத­வக்­கூ­டி­யது அல்ல.

தனி­யார் நிறு­வ­னங்­கள் வழங்­கும் சேமிப்­பு­களில் சேர்ந்­தோர் இருக்­கின்­ற­னர். வழக்­க­மான, 6.75 அல்­லது, 7 சத­வீ­தத்­தோடு ஒப்­பி­டும்­போது, இது சற்று கூடு­தல் தான். ஆனா­லும், அங்­கே­யும் லேசான தயக்­கம் இருந்­தது. இந்­நி­லை­யில், புதிய வகை வங்­கி­கள், நம்­பிக்­கை­ய­ளிக்­கும் விதத்­தில் வந்­துள்­ளன. இதற்கு, ‘சிறு நிதி வங்­கி­கள்’ என்று பெயர். ஒரு காலத்­தில் மைக்ரோ பைனான்ஸ் நிறு­வ­னங்­க­ளா­க­வும், வங்­கி­யல்­லாத நிதிச் சேவை­களை வழங்­கிய அமைப்­பு­க­ளா­க­வும் இருந்­தவை, ஸ்மால் பைனான்ஸ் பேங்­கு­க­ளாக உரு­வெ­டுத்­துள்­ளன.

சிறு நிதி வங்­கி­கள், 2015 முதல் செயல்­பட்டு வரு­கின்­றன. மத்­திய ரிசர்வ் வங்­கி­யின் அனு­ம­தி­யோடு துவங்­கப்­பட்­டவை இவை. முதல் கட்­ட­மாக, 10 சிறு நிதி வங்­கி­கள் செயல்­பட அனு­ம­திக்­கப்­பட்­டன. அவை, ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பேங்க், கேபி­டல் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், திஷா மைக்­ரோ­பின் பிரை­வேட் லிமி­டெட், சூர்­யோ­தய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஈக்­வி­டாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க். மேலும், உட்­கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், உஜ்­வன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஈ.எஸ்.ஏ.எப்., ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகி­ய­வையே. இவர்­கள் அளிக்­கும் வட்டி விகி­தங்­கள், மத்­தி­ய­மர்­க­ளுக்­குத் தெம்பு அளிப்­ப­தாக உள்­ளன.

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி, 366 நாள் வைப்பு நிதிக்கே, 8.50 சத­வீ­தம் வட்டி தரு­கிறது. ஓராண்­டில் இருந்து இரண்டு ஆண்­டுக்­குள்­ளான பல்­வேறு முதிர்வு காலங்­க­ளுக்கு, 9 சத­வீ­தம் வரை வட்டி கிடைக்­கிறது. மூத்த குடி­மக்­க­ளுக்கு, எல்லா முதிர்வு கால வைப்பு நிதி­க­ளி­லும் கூடு­த­லாக அரை சத­வீத வட்டி உண்டு. வழக்­க­மாக ஓராண்டு வைப்பு நிதிக்கு, 6.75 சத­வீ­தம் தான் வட்டி எனும்­போது, 8.50 சத­வீ­தம் என்­பது நிச்­ச­யம் பெரும் லாபம் தானே! மியூச்­சு­வல் பண்­டு­களில் உள்ள கடன் பத்­தி­ரங்­கள் சார்ந்த பண்­டு­களே, 8 சத­வீத அள­வுக்­குத் தான் வரு­வாய் ஈட்­டித் தரு­கின்­றன.

இந்­நி­லை­யில், அடுத்த கேள்­வி­கள் எழு­வது சக­ஜம். ஏன் இவ்­வ­ளவு வட்டி கொடுக்­கின்­றன? நீண்ட காலம் நீடித்து நிற்­குமா? இந்த சிறு நிதி வங்­கி­கள் கடந்த ஒன்­றி­ரண்டு ஆண்­டு­க­ளுக்­குள் துவங்­கப்­பட்­ட­தால், அதற்­கு தொழில் மூல­த­னம் வேண்­டும். 100 கோடி ரூபாய் இருந்­தால் தான், இத்­த­கைய வங்­கி­க­ளைத் துவங்க முடி­யும். அதில், 40 சத­வீ­தத்தை, இதன் புரோ­மோட்­டர்­கள் கொண்­டு­வர வேண்­டும். பின், தொடர்ச்­சி­யான வங்­கிப் பரி­வர்த்­த­னை­க­ளுக்கு மூல­த­னத்தை திரட்­டிக் கொள்­ள­லாம். இன்­றைய போட்டி சூழ்­நி­லை­யில், மக்­க­ளி­டம் இருந்து முத­லீட்டை திரட்­டவே, இவ்­வகை வங்­கி­கள் கூடு­தல் வட்­டியை வழங்­கு­கின்­றன. இவை, பல்­வேறு தொழிற்­க­டன்­கள், சிறு கடன்­கள், விவ­சா­யக் கடன்­கள் ஆகி­ய­வற்றை வழங்­கும் போது, கூடு­த­லான வட்­டி­யையே வசூ­லிக்­கின்­றன. அத­னால், வைப்பு நிதி­க­ளுக்கு இவற்­றால் கொஞ்­சம் கூடு­த­லா­கவே வட்டி வழங்க முடி­யும்.

இவ்­வங்­கி­கள், மத்­திய ரிசர்வ் வங்­கி­யின் அத்­தனை சட்ட திட்­டங்­க­ளுக்­கும் உட்­பட்­டவை. அதன் மூல­த­னத்­தில் குறிப்­பிட்ட பகு­தியை, மத்­திய வங்­கி­யி­டம் இருப்பு வைக்க வேண்­டும் என்­ப­தில் துவங்கி, முத­லீட்­டுக்­கான பாது­காப்­பும் வழங்­கப்­ப­டு­கிறது. பாது­காப்­பு­டன் முத­லீடு, அதே­ச­ம­யம் கொஞ்­சம் கூடு­தல் வட்டி என்று எதிர்­பார்ப்­ப­வர்­க­ளுக்கு, சிறு நிதி வங்­கி­கள் நல்­ல­தொரு வாய்ப்பு. ஆரம்ப நிலை­யில் இருப்­ப­தால், இந்த வட்டி வழங்­கப்­ப­டு­கிறது. பந்­தன் வங்கி மாதிரி வளர்ந்­த­பி­றகு, வழக்­க­மான வட்­டி­க­ளுக்கே இவை­யும் திரும்­பி­வி­டக் கூடும். உங்­க­ளது மொத்த சேமிப்­பு­களில், வைப்பு நிதி ஒரு பகுதி மட்­டுமே. அத்­தனை சேமிப்­பு­க­ளை­யும் இதி­லேயே போட்­டு­வி­டக் கூடாது. மேலும் மூன்று, நான்கு சிறு நிதி வங்­கி­க­ளின் வைப்பு நிதி­களில் முத­லீடு செய்­வது பாது­காப்­பா­னது, புத்­தி­சா­லித்­த­ன­மா­னது.

-ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)