பதிவு செய்த நாள்
27 ஆக2018
10:26
மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஆக.,27) இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் புதிய உச்சகத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. சர்வதேச சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டதை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் துவங்கின.
வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ், நிப்டி இரண்டும் புதிய உச்சத்துடன் துவங்கின. நிப்டி 11600 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமானது. காலை 9.15 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 204.70 புள்ளிகள் உயர்ந்து 38,456.50 புள்ளிகளாகவும், நிப்டி 62.60 புள்ளிகள் உயர்ந்து 11619.70 புள்ளிகளாகவும் இருந்தன. வங்கிகள் மற்றும் உலோகத்துறை பங்குகள் ஏற்றத்துடனேயே காணப்பட்டன.
எஸ்பிஐ, ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட பெரு நிறுவன பங்குகள் தொடர்ந்து உயர்ந்து அதிக லாபம் ஈட்டியதால் 10 மணியளவில் சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. நிப்டி 11650 புள்ளிகள் உயர்ந்தது. சென்செக்ஸ் 350.21 புள்ளிகள் உயர்ந்து 38,602.01 புள்ளிகளாகவும், நிப்டி 99.30 புள்ளிகள் உயர்ந்து 11,656.40 புள்ளிகளாகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|